நடிகை ஜியா கொலை செய்யப்படவில்லை என்கிறது போலீஸ்: ஹைகோர்ட் போகும் அம்மா ராபியா
மும்பை: தற்கொலை செய்து கொண்ட நடிகை ஜியா கானின் அம்மா ராபியா தனது மகள் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற கோணத்தில் விசாரிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகவிருக்கிறார்.
பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த ஜுன் மாதம் 3ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்ட அவரது காதலர் சூரஜ் பஞ்சோலி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே ஜியா கொலை செய்யப்பட்டதாகக் கூறிய அவரின் தாய் ராபியா அதற்கான சில ஆதாரங்களை போலீசில் அளித்தார். இது குறித்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தையும் அணுகினார்.

இந்நிலையில் 447 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த போலீசார் ஜியா தற்கொலை செய்து கொண்டார் என்றும், அவர் கொலை செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர். இதையடுத்து ஜியாவை தற்கொலைக்கு தூண்டியதாக சூரஜ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் ராபியாவோ போலீசார் ஒழுங்காக விசாரணை நடத்தவில்லை என்றும், அவர்கள் மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதை கொலை என்ற கோணத்தில் விசாரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராபியாவின் வழக்கறிஞர் தினேஷ் திவாரி கூறுகையில்,
ஜியா கொலை செய்யப்பட்டார் என்று நம்பும் ராபியா அளித்த ஆதாரங்களை போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால் இது குறித்து அடுத்த வாரம் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகவிருக்கிறோம் என்றார்.
<center><iframe frameborder="0" width="100%" height="417" src="http://www.dailymotion.com/embed/video/x1a5efe?autoplay=1&logo=1&hideInfos=0&start=0&syndication=127059&foreground=&highlight=&background="></iframe></center>












Click it and Unblock the Notifications