நடிகை ஜியா கொலை செய்யப்படவில்லை என்கிறது போலீஸ்: ஹைகோர்ட் போகும் அம்மா ராபியா
மும்பை: தற்கொலை செய்து கொண்ட நடிகை ஜியா கானின் அம்மா ராபியா தனது மகள் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற கோணத்தில் விசாரிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகவிருக்கிறார்.
பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த ஜுன் மாதம் 3ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்ட அவரது காதலர் சூரஜ் பஞ்சோலி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே ஜியா கொலை செய்யப்பட்டதாகக் கூறிய அவரின் தாய் ராபியா அதற்கான சில ஆதாரங்களை போலீசில் அளித்தார். இது குறித்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தையும் அணுகினார்.

இந்நிலையில் 447 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த போலீசார் ஜியா தற்கொலை செய்து கொண்டார் என்றும், அவர் கொலை செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர். இதையடுத்து ஜியாவை தற்கொலைக்கு தூண்டியதாக சூரஜ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் ராபியாவோ போலீசார் ஒழுங்காக விசாரணை நடத்தவில்லை என்றும், அவர்கள் மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதை கொலை என்ற கோணத்தில் விசாரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராபியாவின் வழக்கறிஞர் தினேஷ் திவாரி கூறுகையில்,
ஜியா கொலை செய்யப்பட்டார் என்று நம்பும் ராபியா அளித்த ஆதாரங்களை போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால் இது குறித்து அடுத்த வாரம் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகவிருக்கிறோம் என்றார்.
<center><iframe frameborder="0" width="100%" height="417" src="http://www.dailymotion.com/embed/video/x1a5efe?autoplay=1&logo=1&hideInfos=0&start=0&syndication=127059&foreground=&highlight=&background="></iframe></center>
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications