மார்க்சிஸ்ட் கட்சியில் கோஷ்டி பூசல்- பிரகாஷ் காரத்துக்கு எதிராக யெச்சூரி, அச்சுதானந்தன் போர்க்கொடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்துக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, அச்சுதானந்தன் போர்க்கொடி தூக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

லோக்சபா தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வெறும் 9 இடங்களைத்தான் கைப்பற்றியது. அதுவும் 34 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த மேற்கு வங்கத்தில் வெறும் 2 தொகுதிகளில்தான் மார்க்சிஸ்ட் கட்சியால் வெல்ல முடிந்தது. தற்போது மேற்கு வங்கத்தில் பாஜக காலூன்ற முயற்சித்து வருகிறது.

No internal dissent in CPM; party will adopt new political line: Prakash Karat

மாநிலக் கட்சியாக சுருங்கி...

இதேபோல் கேரளாவில் பெரும் பின்னடைவை எதிர்கொண்டிருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. தேசியக் கட்சிகளில் ஒன்றாக இருந்த போதும் ஒரு மாநிலக் கட்சியைவிட மோசமான இடங்களையே மார்க்சிஸ்ட் கட்சியால் பெற முடிந்துள்ளது.

மத்திய குழுக் கூட்டம்- யெச்சூரி அறிக்கை

இந்த நிலையில் டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கடந்த 35 ஆண்டுகாலமாக மார்க்சிஸ்ட் கட்சி கடைபிடித்து வரும் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 5 பக்க அறிக்கை ஒன்றை மூத்த தலைவரான சீதாராம் யெச்சூரி தாக்கல் செய்தார்.

கட்சி தலைமை மீது புகார்

கடந்த லோக்சபா தேர்தல் தோல்விக்கு கட்சி தலைமை தவறான வியூகம் வகுத்ததே காரணம் என்றும் சாடியிருக்கிறார் யெச்சூரி.

அச்சுதானந்தன் போர்க்கொடி

இதேபோல் மற்றொரு மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன், 10 பக்க அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் கேரளா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எப்படியெல்லாம் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறது; சில இடங்களில் மோடியைக் கூட மார்க்சிஸ்ட் கட்சியினர் புகழ்கின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ள அச்சுதானந்தன், இப்படியே போனால் கேரளாவிலும் மார்க்சிஸ்ட் கட்சி படுதோல்வியைத்தான் சந்திக்கும் என்று சாடியுள்ளார்.

சுயபரிசோதனைதான்..

இப்படி மார்க்சிஸ்ட் கட்சிக்குள் பூசல் வெடித்துள்ளது குறித்து டெல்லியில் இன்று அக்கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பிரகாஷ் காரத், கட்சியில் பூசல் என்று எதுவும் இல்லை. சுயபரிசோதனைக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கட்சி புதிய அரசியல் வியூகத்தை வகுக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. அத்தகையோர் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். இதுபற்றி ஆராய்ந்து வருகிறோம் என்று பட்டும் படாமல் மட்டும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+