மோடியிடம் நான் கண்ட நல்ல குணம்... காங். வேட்பாளர் நடிகை ரம்யா
மாண்டியா: இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தனக்கில்லை எனத் தெரிவித்துள்ள மாண்டியா தொகுதி எம்.பியும், நடிகையுமான ரம்யா, பாஜக பிரதமர் வேட்பாளரிடம் தான் கண்ட நல்ல குணம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார்.
நடிகையாக இருந்து அரசியல் பிரவேசம் செய்தவர் ரம்யா. முன்பு ரபேல் என்பவரை ரம்யா காதலிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், சிலப்பல காரணங்களால் அது தோல்வியில்முடிந்தது.
இதர்கிடையே நாட்டின் இளம் எம்.பி என்ற பெருமையுடன் காங்கிரஸ் கட்சியின் மாண்டியா தொகுதி எம்.பியானார் ரம்யா. லோக்சபா தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அப்பேட்டியில் ரம்யா கூறியிருப்பதாவது :-
ரபேல் என் நண்பர்...
ரபேல் தற்பொழுதும் ஒரு நல்ல நண்பர். ஆனால் திருமணம் அல்லது அதுபோன்ற வேறு பந்தத்தில் இணைவது குறித்து தனது எண்ணத்தில் இல்லை
நாலு பேருக்கு நல்லது செய்யணும்....
நான் தீவிர அரசியலில் இறங்கியுள்ளேன். எனது தொகுதிக்கு என்னால் இயன்ற அனைத்து நன்மைகளையும் செய்ய விரும்புகிறேன்.
எனது நோக்கம் அதுவல்ல....
திருமணம் என்பது எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று இல்லை. எனவே, திருமணம் செய்து கொண்டு உடனடியாக குடும்பத்தை கவனிப்பது என்பதில் எண்ணம் இல்லை.
மோடியின் நல்ல குணம்....
நரேந்திர மோடியிடம் நான் கண்ட ஒரு நல்ல குணம் என்னவென்றால் அவர் தப்பிக்கும் வழியை தெரிந்து வைத்திருப்பவர் என்பதுதான் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.