லக்னோவில் ராஜ்நாத் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்தேனா.. லால்ஜி டாண்டன் மறுப்பு

இந்தத் தொகுதியில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கே போட்டியிடப் போவதாகவும், அதற்கு லால்ஜி டாண்டன் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இப்படி மறுத்துள்ளார் டாண்டன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அதெல்லாம் இல்லை. நான் ராஜ்நாத் சிங்குக்கு எதிராக குரல் கொடுத்தேன் என்று கூறுவதில் உண்மை இல்லை. எனக்கும் கட்சித் தலைவருக்கும் இடையே இதயப்பூர்வமான உறவு, நட்பு உள்ளது.
அவருக்கு எதிராக நான் பேசுவதற்கான வாய்ப்பே இல்லை. அப்படி நான் பேசவும் இல்லை.
மேலும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதைப் போல ராஜ்நாத் சிங், லக்னோ தொகுதியில் போட்டியிடப் போவதாக கட்சியில் எந்த விதமான அறிகுறியும் இல்லை, பேச்சும் இல்லை.
நான் லக்னோ தொகுதியின் தற்போதைய எம்.பி. என்னிடம் வேறு தொகுதியைப் பார்த்துக் கொள்ளுமாறு இதுவரை யாரும் கட்சியிலிருந்து கேட்கவும் இல்லை.
நரேந்திர மோடி இந்தத் தொகுதியில் போட்டியிட விரும்பினால் நிச்சயம் நான் அவரை வரவேற்பேன்.
நான் லக்னோவில் பிறந்தவன். மாநிலத் தலைநகரின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவன். லக்னோவின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன் என்றார் அவர்.
முன்பு லக்னோ தொகுதியிலிருந்துதான் வாஜ்பாய் லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தீவிர விசுவாசிதான் லால்ஜி டாண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications