வீட்டுல டாய்லெட் இல்லையா.. உள்ளாட்சி தேர்தலில் சீட் கிடையாது: நிதீஷ் குமார்
பாட்னா: தமது வீட்டில் கழிப்பறை கட்டாதவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கமாட்டார்கள் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அதிரடி உத்தரவிட்டிருக்கிறார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் பேசிய பீகார் முதல்வர் நிதீஷ்குமார், கழிப்பறைகள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க பீகார் பஞ்சாயத் ராஜ் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும்.

பீகாரில் 1.11 கோடி கழிப்பறைகள் கட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால் பீகாரில் சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் வீடுகளில் கழிப்பறை இல்லை என்கிறது அரசு புள்ளிவிவரங்கள்.
போதுமான பணம் வைத்திருப்பவர்கள் குறிப்பாக அரசு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறவர்கள் தங்களது சொந்த செலவில் வீடுகளில் கழிப்பறைகளை கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சில தலைவர்கள் இப்போதுதான் கழிப்பறைகளைப் பற்றி பேசுகின்றனர் (நரேந்திர மோடி பெயரைக் குறிப்பிடாமல்)
நாங்களோ 6 ஆண்டுகளுக்கு முன்பே கழிப்பறைகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம். 2007ஆம் ஆண்டே கோயில்களை விட கழிப்பறைகளே அவசியம் என்பதை நடைமுறைப்படுத்தியே இருக்கிறோம்.
வீடுகளில் கழிப்பறைகளை அமைக்காதவரக்ளுக்கு வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கமாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications