தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் எண்ணமில்லை - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
தமிழகத்தில் அரசியல் குழப்பம் நிலவுவதால் ஆட்சி கலைப்பு எதுவும் நடக்காது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் தெரிவித்துள்ளார்.
டெல்லி: அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி பிரச்சனை. அதனை காரணமாக வைத்து தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க, முகாந்திரம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அஇஅதிமுக பல அணிகளாக பிளவுபட்டது. இதனையடுத்து பிளவுபட்ட அணிகளில் முக்கியமான அணிகளான ஓபிஎஸ் அணி, ஈபிஸ் அணிகள் மீண்டும் இணைந்து ஒருங்கிணைந்த கட்சியானது. ஆனாலும் அஇஅதிமுக மேலிடத்தில் இன்னமும் அமைதி ஏற்படவில்லை. இதனால் ஆட்சி கலையும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அணிகள் இணைப்புக்கு பின்னர், டி.டி.வி தினகரன் எதிர்ப்பு நிலை அஇஅதிமுகவில் வலுத்தது. இதனால், 21 எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக பிரிந்து வந்து தினகரனை ஆதரித்தனர்.
மேலும், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தங்களது ஆதரவு இல்லை என கடிதம் கொடுத்தனர். இது தமிழக அரசியலில் பரபரப்பினை ஏற்படுத்தியது.
சட்டசபையில் மெஜாரிட்டியை, நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இதனால் அடுத்தக்கட்ட பரபரப்புக்கு அஇஅதிமுக தயாராகியுள்ளது.
தமிழக அமைச்சர்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும் அரசியல் நிலவரம்தான் பேசினார்கள் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிகின்றன.
இந்நிலையில், "தமிழகத்தில் ஆட்சியை கலைப்பதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை. அதிமுகவில் நடப்பது உட்கட்சிப்பூசல். இதனால் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது" என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி












Click it and Unblock the Notifications