தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் எண்ணமில்லை - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
தமிழகத்தில் அரசியல் குழப்பம் நிலவுவதால் ஆட்சி கலைப்பு எதுவும் நடக்காது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் தெரிவித்துள்ளார்.
டெல்லி: அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி பிரச்சனை. அதனை காரணமாக வைத்து தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க, முகாந்திரம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அஇஅதிமுக பல அணிகளாக பிளவுபட்டது. இதனையடுத்து பிளவுபட்ட அணிகளில் முக்கியமான அணிகளான ஓபிஎஸ் அணி, ஈபிஸ் அணிகள் மீண்டும் இணைந்து ஒருங்கிணைந்த கட்சியானது. ஆனாலும் அஇஅதிமுக மேலிடத்தில் இன்னமும் அமைதி ஏற்படவில்லை. இதனால் ஆட்சி கலையும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அணிகள் இணைப்புக்கு பின்னர், டி.டி.வி தினகரன் எதிர்ப்பு நிலை அஇஅதிமுகவில் வலுத்தது. இதனால், 21 எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக பிரிந்து வந்து தினகரனை ஆதரித்தனர்.
மேலும், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தங்களது ஆதரவு இல்லை என கடிதம் கொடுத்தனர். இது தமிழக அரசியலில் பரபரப்பினை ஏற்படுத்தியது.
சட்டசபையில் மெஜாரிட்டியை, நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இதனால் அடுத்தக்கட்ட பரபரப்புக்கு அஇஅதிமுக தயாராகியுள்ளது.
தமிழக அமைச்சர்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும் அரசியல் நிலவரம்தான் பேசினார்கள் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிகின்றன.
இந்நிலையில், "தமிழகத்தில் ஆட்சியை கலைப்பதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை. அதிமுகவில் நடப்பது உட்கட்சிப்பூசல். இதனால் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது" என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications