மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. யானையை காப்பாற்ற மீட்பு குழுவுடன் சென்ற செய்தியாளர் பலி!
புவனேஸ்வரம்: ஒடிஸாவின் பிரபல டிவி சேனலின் செய்தியாளர் ஆரிந்தம் தாஸ் மகாநதி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட யானையை காப்பாற்ற முயன்ற போது மீட்புக் குழுவின் படகு கவிழ்ந்து பலியாகிவிட்டார்.
ஒடிஸாவின் முன்னணி டிவி சேனலின் செய்தியாளர் ஆரிந்தம் தாஸ் (39). இவர் களத்தில் இறங்கி பணியாற்றுவதை விரும்புபவர். பைலின் புயல், ஃபனி புயல் ஆகிய இயற்கை இடர்களின் போதும் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையின் போதும் ஆபத்தை மறந்து களத்தில் இருந்து செய்திகளை உடனடியாக தந்தவர்.
ஒடிஸா மாநிலம் கட்டாக் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மகாநதி ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது. அப்போது முண்டாலி என்ற பகுதியில் ஆற்றை கடக்க முயன்ற யானை மகாநதி ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

ஆழமான பகுதி
இதுகுறித்து தகவலறிந்த மீட்புக் குழு யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த குழுவுடன் செய்தி புகைப்படக் கலைஞர் ஆரிந்தமும் சென்றிருந்தார். யானை மிகவும் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதால் மீட்புக் குழுவினர் படகில் சென்று மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஆரிந்தமும் அந்த படகில் சென்றிருந்தார்.

ஆபத்தான நிலை
அந்த சமயத்தில் காற்றின் வேகமும் நீரின் வேகமும் அதிகமாக இருந்ததால் இவர்கள் சென்ற படகானது தண்ணீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆரிந்தம் தாஸ் நீரில் மூழ்கி பலியாகிவிட்டார். மீட்புக் குழுவில் உள்ள ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இரங்கல்
மேலும் 3 மீட்பு குழுவை சேர்ந்த வீரர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். புகைப்படக் கலைஞர் மறைவுக்கு ஒடிஸா ஆளுநர் கணேஷ் லால், முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆரிந்தத்திற்கு தாய், மனைவி, ஒரு மகன் உள்ளனர்.

கேமரா மேன்
ஆரிந்தத்துடன் மீட்பு பணிக்கு சென்றிருந்த மற்றொரு கேமராமேன் பிரவாத் சிங்காவும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மீட்பு படையினர் கூறுகையில் ஆரிந்தத்தை உயிருடன் மீட்க நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அவரது உடல் மட்டுமே மீட்கப்பட்டது என தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications