பாஜகவுக்கு 'கருப்புப் பண' ராதா டிம்போலா தந்த ரூ. 1.8 கோடி நன்கொடை; காங்கிரசுக்கு ரூ. 65 லட்சம்!
டெல்லி: வெளிநாட்டில் கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள பெயர்களில் ராதா டிம்போலா காங்கிரசுக்கு மட்டுமின்றி பாஜகவுக்கும் தேர்தல் செலவுகளுக்காக அள்ளித் தந்துள்ளார்.
கோவாவைச் சேர்ந்த டிம்போலா சுரங்க நிறுவனம் 2004-05ம் ஆண்டு முதல் 2011-12ம் ஆண்டு வரையிலான 7 ஆண்டு காலகட்டத்தில் பாஜகவுக்கு 9 முறை நன்கொடை வழங்கியுள்ளார். இந்தக் காலகட்டத்தில் இவர் பாஜகவுக்கு ரூ. 1.8 கோடி தந்துள்ளார்.

அதே போல காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் ரூ. 65 லட்சம் நன்கொடை தந்துள்ளார். இதை 3 தவணையாக கொடுத்துள்ளார்.
2011-12ம் ஆண்டில் கோவாவில் சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது பாஜகவுக்கு அவர் நன்கொடை தந்துள்ளார். கோவாவில் இப்போது பாஜக ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் கருப்புப் பண முதலைகள் பட்டியலில் ராதாவின் பெயர் இருப்பது குறித்து கோவா பாஜக முதல்வர் மனோகர் பரிக்கரிடம் கேட்டதற்கு, நான் இன்னும் மத்திய அரசின் பிரமாண பத்திரத்தை பார்க்கவில்லை என்று மொட்டையாக பதில் தந்துவிட்டு எஸ்கேப் ஆனார்.
கருப்புப் பணம் வைத்திருப்போரின் பட்டியல் வெளியானால் காங்கிரஸ் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தார். ஆனால், நன்கொடைகளைப் பார்க்கும்போது காங்கிரஸை விட பாஜக தான் அதிக தர்மசங்கடத்துக்கு உள்ளாக வேண்டியிருப்பதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications