அந்த 'மோடி ஆப்' மேல எங்களுக்கு நம்பிக்கையே இல்ல! - எதிர்க்கட்சிகள்
டெல்லி: உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது குறித்து 'நரேந்திர மோடி செயலி' (ஆப்) வாயிலாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு நம்பகத் தன்மையற்றது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
செவ்வாய்க்கிழமை காலை 10 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 10 மணி வரை நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் 5 லட்சம் பேர் பங்கேற்று, தங்கள் கருத்துக்களைத் தெரிவித்ததாகவும், அதில் 93 சதவீதம் பேர் அரசின் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், இந்த நடவடிக்கை மிக மோசமானது என்று 2 சதவீதம் பேர் மட்டுமே கூறியுள்ளதாகவும் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்ப இணையப் பக்கத்தில் அறிவித்திருந்தனர்.

ஆனால் இந்த கருத்துக் கணிப்பின் நம்பகத் தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ளன.
இது சந்தேகத்துக்கிடமானது என்றும், மோடியின் ஆதரவாளர்கள் மட்டுமே பங்கேற்ற சர்வே என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது:
கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள், முதலில் பிரதமர் மோடிக்காகவே மத்திய அரசை ஆதரித்திருக்கிறார்கள். இரண்டாவது, கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் மத்திய அரசுக்கு சாதகமாக பதிலளிக்கும் வகையிலேயே உள்ளது.
மூன்றாவது, கிராமப் புறங்களைச் சேர்ந்த மக்கள் யாருமே இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றிருக்க வாய்ப்பில்லை. 5 லட்சம் பேர் 24 மணி நேரத்தில் இந்த செயலியை தரவிறக்கம் செய்தனர் என்ற புள்ளி விபரமே சந்தேகத்துக்குரியதாக உள்ளது," என்றார் அவர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications