சசிகலா அணி மீது கிரிமினல் நடவடிக்கை.... தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தரப்பு புகார்!
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக சசிகலா அணி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் போலியானவை என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி அதிமுக அம்மா அணி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் போலியானவை என்று ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் சசிகலா அணி உரிமை கொண்டாடியதால் சின்னத்தையும் கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்நிலையில் இருஅணிகளும் சின்னம் தொடர்பாக பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

ஜுன்16ம் தேதிக்குள் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் சசிகலா அணி லட்சக்கணக்கில் லாரி லாரியாக பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தன. இந்த பிரமாணப் பத்திரங்களை படித்து முடிக்கவே 10 ஆண்டுகள் ஆகும் என்று விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில் சசிகலா அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்டவை அனைத்தும் போலி ஆவணங்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியின் மைத்ரேயன் மற்றும் மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன் எம்.பி, சசிகலா அணி லட்சக்கணக்கில் தாக்கல் செய்துள்ளவற்றில் பல போலியான ஆவணங்கள். வேண்டுமென்றே கால தாமதம் ஏற்படுத்தும் விதமான
மேலும் காலஅவகாசம் தேவை என்று கோரிக்கை வைத்துள்ளார்கள் இதனை ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மனோஜ்பாண்டியன் சசிகலா அணி அளித்துள்ள பத்திரங்கள், கையெழுத்தகள் போலியானவை என்று ஆதாரத்துடன் தேர்தல்ஆணயைத்திடம் அளித்துள்ளோம். போலி ஆவணங்களை தயாரித்தவர்கள் அவர்களுக்கு துணை நின்றவர்கள் மீது கிரிமினல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications