புகையிலையால் உண்டாகும் வாய்ப் புற்றுநோய்... 6 மணி நேரத்திற்கு ஒரு இந்தியர் பலியாகிறார்!
டெல்லி: புகையிலை தொடர்பான போதை பழக்கங்களுக்கு அடிமையாகி இந்தியாவில் 6 மணி நேரத்துக்கு ஒருவர் பலியாகி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நாளுக்கு நாள் இந்தியர்களிடையே புகை பிடித்தல் மற்றும் புகையிலைப் பொருட்களை மெல்லும் பழக்கம் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இதனால், வாய்ப் புற்றுநோய் தொடர்பான மரணங்களும் பெருகி வருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக இந்திய பல் மருத்துவ சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் அசோக் தோப்ளே செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

வாய்ப்புற்று...
புகையிலையின் தாக்கத்தால் உருவாகும் வாய்ப்புற்று நோயால் இந்தியாவில் 6 மணி நேரத்திற்கு ஒருவர் பரிதாபமாக உயிரிழக்கிறார்.

மூன்றில் ஒருவர்...
தென் மாநிலங்களில் மூன்றில் ஒருவர் புகையிலை உள்ளிட்ட மெல்லும் போதைப் பொருட்களை எடுத்துக் கொள்பவராக உள்ளார்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புகையிலை ஒழிப்பு...
புகையிலையை முற்றிலுமாக ஒழித்தாலன்றி, இந்த மரண விகிதத்தை தவிர்க்க முடியாது எனக் கூறுகின்றனர் புற்று நோய் ஆராய்ச்சி துறை நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும்.

மாற்று ஏற்பாடு...
‘புகையிலை விவசாயம், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப் படுத்தும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு வேண்டிய மாற்று ஏற்பாடுகளை மத்திய-மாநில அரசுகள் செய்து தந்துவிட்டு, நாடு முழுவதும் புகையிலையை பயிரிடுவதையே முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications