புகையிலையால் உண்டாகும் வாய்ப் புற்றுநோய்... 6 மணி நேரத்திற்கு ஒரு இந்தியர் பலியாகிறார்!
டெல்லி: புகையிலை தொடர்பான போதை பழக்கங்களுக்கு அடிமையாகி இந்தியாவில் 6 மணி நேரத்துக்கு ஒருவர் பலியாகி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நாளுக்கு நாள் இந்தியர்களிடையே புகை பிடித்தல் மற்றும் புகையிலைப் பொருட்களை மெல்லும் பழக்கம் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இதனால், வாய்ப் புற்றுநோய் தொடர்பான மரணங்களும் பெருகி வருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக இந்திய பல் மருத்துவ சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் அசோக் தோப்ளே செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

வாய்ப்புற்று...
புகையிலையின் தாக்கத்தால் உருவாகும் வாய்ப்புற்று நோயால் இந்தியாவில் 6 மணி நேரத்திற்கு ஒருவர் பரிதாபமாக உயிரிழக்கிறார்.

மூன்றில் ஒருவர்...
தென் மாநிலங்களில் மூன்றில் ஒருவர் புகையிலை உள்ளிட்ட மெல்லும் போதைப் பொருட்களை எடுத்துக் கொள்பவராக உள்ளார்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புகையிலை ஒழிப்பு...
புகையிலையை முற்றிலுமாக ஒழித்தாலன்றி, இந்த மரண விகிதத்தை தவிர்க்க முடியாது எனக் கூறுகின்றனர் புற்று நோய் ஆராய்ச்சி துறை நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும்.

மாற்று ஏற்பாடு...
‘புகையிலை விவசாயம், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப் படுத்தும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு வேண்டிய மாற்று ஏற்பாடுகளை மத்திய-மாநில அரசுகள் செய்து தந்துவிட்டு, நாடு முழுவதும் புகையிலையை பயிரிடுவதையே முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications