ஆரஞ்ச் அலெர்ட்.. நிரம்புகிறது ஆசியாவின் பெரிய இடுக்கி ஆர்க் அணை.. 26 வருடத்திற்கு பின் திறப்பு!
ஆசியாவின் பெரிய ஆர்க் அணையான இடுக்கி அணை, தற்போது முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைத்து இருக்கிறது.
Recommended Video
இடுக்கி: ஆசியாவின் பெரிய ஆர்க் அணையான இடுக்கி அணை, தற்போது முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைத்து இருக்கிறது.
இதனால் அந்த அணை விரைவில் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. கேரளாவில் இடுக்கியில் தண்ணீர் தேவைக்காகவும், மின்சார தேவைக்காகவும் இடுக்கி அணை 1960களில் கட்டப்பட்டது.
குறவன் குறத்தி என்ற இரண்டு ராட்சச மலைகளுக்கு இடையில் இந்த அணை கட்டப்பட்டது. இதுதான் ஆசியாவில் இருக்கும் மிகப் பெரிய ஆர்க் அணைகளில் ஒன்றாகும்.
ஆரஞ்ச் அலெர்ட்
இதன் முழு கொள்ளளவு, 2,403 அடியாகும். தற்போது 2,395 அடியை இந்த அணை எட்டி இருக்கிறது. அங்கு பெய்யும் கனமழையால் இந்த அளவு தண்ணீர் நிரம்பி இருக்கிறது. இதனால் தற்போது அங்கு ஆரஞ்சு அலெர்ட் எனப்படும், பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.
திறக்கப்பட உள்ளது
ஆரஞ்ச் அலெர்ட் விடப்பட்ட சில நாட்களில் பெரும்பாலும் இந்த அணை திறக்கப்பட வேண்டும். இதனால் நாளை இந்த அணை திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அணை வேகமாக நிரம்பி இருக்கிறது. இதை பார்க்க அங்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி வருகிறார்கள்.
கடைசியாக எப்போது
மொத்தம் இரண்டு முறை மட்டுமே இந்த அணை திறக்கப்பட்டது. முதல்முறை அணை கட்டப்பட்ட போது 1975ல் சோதனைக்காக திறக்கப்பட்டது. அதன்பின் 1995ல் அணை நிரம்பி திறக்கப்பட்டது. அதன்பின் 26 வருடங்கள் கழித்து இப்போதுதான் அணை திறக்கப்பட உள்ளது. இதனால் இந்த நிகழ்வு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு பகுதி
தற்போது இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. இதில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போதிய நடவடிக்கை எடுக்கப்பட்ட இருக்கிறது. அதேபோல் இதனால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழ்நாட்டு பகுதியிலும் அதிக தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளது.