மும்பையில் ஒரே ஆண்டில் அபார்ஷன் செய்த 100க்கும் மேற்பட்ட 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: 2013-2014ம் ஆண்டில் மும்பையில் 100க்கும் மேற்பட்ட 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கருகலைப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

2013-2014ம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் எத்தனை பேர் கருகலைப்பு செய்துள்ளனர் என்று விவரத்தை அளிக்குமாறு சேத்தன் கோதாரி என்பவர் தகவல் அறியும் சட்டம் மூலம் மும்பை முனிசிபால் கார்பரேஷனிடம் கேட்டிருந்தார்.

அதற்கு மாநகராட்சி நிர்வாகம் அளித்துள்ள பதிலின் விவரம் வருமாறு,

கருகலைப்பு

கருகலைப்பு

2013-2014ம் ஆண்டில் மட்டும் மும்பையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கருகலைப்பு செய்துள்ளனர். இதில் சிறுமிகளும் அடக்கம்.

சிறுமிகள்

சிறுமிகள்

கருகலைப்பு செய்தவர்களில் 100க்கும் மேற்பட்டோர் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் ஆவர். மேலும் 900 பேர் 16 முதல் 19 வயது வரை உள்ளவர்கள்.

டாக்டர்கள்

டாக்டர்கள்

சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டோ அல்லது தவறான தொடர்புகள் மூலமாகவோ கர்ப்பம் தரித்ததால் தான் அதை கலைத்துள்ளனர் என்று அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

காரணம்

காரணம்

சிறுமிகள் இத்தனை பேர் கருகலைப்பு செய்துள்ளது பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் நடத்துவது, செக்ஸ் கல்வி பற்றிய விழுப்புணர்வு இல்லாதது மற்றும் பலாத்காரம் செய்யப்படுவது ஆகியவையே குறிக்கிறது என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+