நம் நாட்டில் வரி செலுத்தும் தனி நபர்கள் எண்ணிக்கை எத்தனை? நிர்மலா சீதாராமன் பதில்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டில் 3.46 கோடி வரி செலுத்தும் தனி நபர்கள் இருப்பதாக மத்திய நிதி துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக வந்த கேள்வியொன்றுக்கு பதிலளித்து நிர்மலா சீதாராமன் கூறிய பதில்:

2012-13ம் நிதியாண்டில், 3 கோடியே 46 லட்சத்து 4 ஆயிரத்து 64 தனி நபர்கள் (நிறுவனங்கள் தவிர்த்து) வரி செலுத்தக்கூடியவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்தாண்டு ஜூன் மாதம் வரையில் அரசுக்கு வர வேண்டிய, ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 519 கோடி வருமான வரி பாக்கி நிலுவையிலுள்ளது. அதேபோல 3.21 லட்சம் கோடி கார்பொரேட் வரி பாக்கியுள்ளது.
போலி பாஸ்வேர்ட் மற்றும் ஐடி தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் மீது வந்த புகாரை தொடர்ந்து இப்போது பாஸ்வேர்ட் நடைமுறையை மாற்றியமைத்துள்ளோம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications