டெல்லி அருகே பயங்கரம்... துப்பாக்கி முனையில் தாய்-மகளை பலாத்காரம் செய்த 12 பேர் கும்பல்- 3 பேர் கைது
டெல்லி: டெல்லி அருகே காரில் சென்று கொண்டிருந்த தாய், மகள் இருவர் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புலந்த்ஷஹர் மாவட்டம் வழியாக டெல்லி-கான்பூர் நெடுஞ்சாலையில் நொய்டாவைச் சேர்ந்த தாயும் மகளும் காரில் சென்றனர். அப்போது சாலையோரம் நின்றிருந்த 15-க்கும் மேற்பட்டோர் கொண்ட ஒருகும்பல் அந்த காரின்மீது கற்கள் போன்ற பொருட்களை வீசி எரிந்தன.

அந்த கார் நின்றதும் துப்பாக்கி முனையில் மிரட்டி உள்ளே இருந்தவர்களை அருகே இருந்த வயலுக்கு இழுத்து சென்றது அந்த கும்பல். அவர்களிடம் இருந்த பணம், நகைகள் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்ததுடன் ஆண்களை கட்டிப்போட்டுவிட்டு 14 வயது சிறுமி மற்றும் அவரது தாயாரை துப்பாக்கி முனையில் மாறி மாறி பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடியிருக்கிறது அக்கும்பல்.
பின்னர் கும்பலில் இருந்து தப்பிய ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
தற்போது இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 12 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைத்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications