குஜராத்தில் தாக்குதல் நடத்த படகில் தீவிரவாதிகளை அனுப்பியது பாக். உளவு அமைப்பான ஐஎஸ்ஐ!
டெல்லி: இந்திய கடல் எல்லைக்குள் வந்த மர்ம படகில் தீவிரவாதிகளை அனுப்பி வைத்தது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பாக இருக்கும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
ஜனவரி 1ம்தேதி, அரபிக்கடல் மார்க்கமாக, குஜராத்தை நோக்கி வந்து கொண்டிருந்த மர்ம படகை இந்திய கடற்படை தடுத்து நிறுத்த முற்பட்டது. அப்போது அந்த படகில் இருந்த நால்வரும் அதை வெடித்து சிதற செய்து உயிரிழந்தனர்.

மும்பையில் 2008ம் ஆண்டு கடல்மார்க்கமாக வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதேபோல குஜராத்தில் தாக்குதலை நடத்த இந்த படகு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே பாகிஸ்தானின், ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு இந்த சம்பவத்தில் தொடர்புள்ளது என்று இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
பாகிஸ்தானின் ஓய்வு பெற்ற கடல்படை அதிகாரி ஒருவர் தலைமையில், பயிற்சி பெற்ற நால்வர் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் துறைமுகத்தை நோக்கி வந்ததாக இந்திய உளவுத்துறை சந்தேகிக்கிறது. நேரடியாக இதுபோன்ற தாக்குதல்களில் இறங்கினால் உலக நாடுகள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் என்பதால் ஐஎஸ்ஐ அதிகாரிகளை தவிர்த்து, வேறு தீவிரவாதிகள் மூலம் இந்தியாவிற்குள் ஊடுருவ சதி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரம், அந்த படகு பாகிஸ்தானில் இருந்து சென்றதில்லை என்றும், கடத்தல்காரர்கள் படகாக இருக்கலாம் என்றும் பாகிஸ்தான் தொடர்ந்து தெரிவித்துவருகிறது. மும்பையில் தாக்குதல் நடைபெற்ற பிறகும், பாகிஸ்தான் இப்படியேதான் தனக்கு சம்மந்தம் இல்லாததை போல கூறிவந்தது.
ஐஎன்எஸ் துவாரகா-2 போர்க்கப்பல் இயக்கத்தை, ஜனவரி 12ம்தேதி போர்பந்தர் துறைமுகத்தில் தொடங்கி வைக்க பாதுகாப்பு துறை திட்டமிடுருந்தது. இநத் நிகழ்ச்சியை கெடுக்கவே தீவிரவாதிகள் போர்பந்தரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே, தீவிரவாதிகள் வந்த படகு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தால், 12ம்தேதி நடைபெறவிருந்த போர்க்கப்பல் இயக்க துவக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்திய பிறகு புதிய தேதி அறிவிக்கப்படும்.
-
அமெரிக்கா vs ஈரான்.. இஸ்லாமாபாத்தில் நடக்கும் 'மைண்ட் கேம்'. மிரட்டிய ட்ரம்ப்! பேச்சுவார்த்தை இழுபறி -
அமெரிக்கா - ஈரான் மீட்டிங்: மீடியேட்டராக இருக்கும் பாகிஸ்தானுக்கு என்ன லாபம்..? பெரிய லிஸ்ட் இருக்கு -
உலகமே தேடும் பாகிஸ்தானின் செரீனா ஹோட்டல்.. ஈரான் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தேர்வானது எப்படி? -
திடீரென அமெரிக்க துணை அதிபர் விமானத்தை சூழ்ந்த போர் விமானங்கள்.. பாகிஸ்தான் வான் எல்லையில் பரபரப்பு! -
போதையில் பாகிஸ்தான் அமைச்சர் செய்த காரியம்? மிக பெரிய போர் வெடித்திருக்கும்.. அலட்சியத்தின் உச்சம் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications