குஜராத்தில் தாக்குதல் நடத்த படகில் தீவிரவாதிகளை அனுப்பியது பாக். உளவு அமைப்பான ஐஎஸ்ஐ!
டெல்லி: இந்திய கடல் எல்லைக்குள் வந்த மர்ம படகில் தீவிரவாதிகளை அனுப்பி வைத்தது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பாக இருக்கும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
ஜனவரி 1ம்தேதி, அரபிக்கடல் மார்க்கமாக, குஜராத்தை நோக்கி வந்து கொண்டிருந்த மர்ம படகை இந்திய கடற்படை தடுத்து நிறுத்த முற்பட்டது. அப்போது அந்த படகில் இருந்த நால்வரும் அதை வெடித்து சிதற செய்து உயிரிழந்தனர்.

மும்பையில் 2008ம் ஆண்டு கடல்மார்க்கமாக வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதேபோல குஜராத்தில் தாக்குதலை நடத்த இந்த படகு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே பாகிஸ்தானின், ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு இந்த சம்பவத்தில் தொடர்புள்ளது என்று இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
பாகிஸ்தானின் ஓய்வு பெற்ற கடல்படை அதிகாரி ஒருவர் தலைமையில், பயிற்சி பெற்ற நால்வர் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் துறைமுகத்தை நோக்கி வந்ததாக இந்திய உளவுத்துறை சந்தேகிக்கிறது. நேரடியாக இதுபோன்ற தாக்குதல்களில் இறங்கினால் உலக நாடுகள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் என்பதால் ஐஎஸ்ஐ அதிகாரிகளை தவிர்த்து, வேறு தீவிரவாதிகள் மூலம் இந்தியாவிற்குள் ஊடுருவ சதி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரம், அந்த படகு பாகிஸ்தானில் இருந்து சென்றதில்லை என்றும், கடத்தல்காரர்கள் படகாக இருக்கலாம் என்றும் பாகிஸ்தான் தொடர்ந்து தெரிவித்துவருகிறது. மும்பையில் தாக்குதல் நடைபெற்ற பிறகும், பாகிஸ்தான் இப்படியேதான் தனக்கு சம்மந்தம் இல்லாததை போல கூறிவந்தது.
ஐஎன்எஸ் துவாரகா-2 போர்க்கப்பல் இயக்கத்தை, ஜனவரி 12ம்தேதி போர்பந்தர் துறைமுகத்தில் தொடங்கி வைக்க பாதுகாப்பு துறை திட்டமிடுருந்தது. இநத் நிகழ்ச்சியை கெடுக்கவே தீவிரவாதிகள் போர்பந்தரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே, தீவிரவாதிகள் வந்த படகு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தால், 12ம்தேதி நடைபெறவிருந்த போர்க்கப்பல் இயக்க துவக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்திய பிறகு புதிய தேதி அறிவிக்கப்படும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications