இந்திய எல்லைக்குள் வந்த பாக். விமானங்கள்.. காஷ்மீர் ஏர்-போர்ஸ் கட்டிடம் அருகே தாக்குதல்.. பகீர்!
பாகிஸ்தானுக்கு சொந்தமான போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் புகுந்து இன்று தாக்குதல் நடத்தி இருக்கிறது.
Recommended Video
ஸ்ரீநகர்: பாகிஸ்தானுக்கு சொந்தமான போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் புகுந்து இன்று தாக்குதல் நடத்தி இருக்கிறது.
நேற்றுதான் பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் அழிக்கப்பட்டது.
இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது கடும் கோபத்தில் உள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என்று அச்சம் நிலவி வருகிறது.
உள்ளே வந்தது
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு சொந்தமான போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் இன்று புகுந்து உள்ளது. காஷ்மீரில் ராஜூரி எல்லைக்குள் இந்த விமானங்கள் புகுந்து இருக்கிறது. பாகிஸ்தானுக்கு சொந்தமான எப் -16 ரக போர் விமானங்கள் இந்த செயலை செய்துள்ளது.
எத்தனை விமானங்கள்
மொத்தம் 2-3 விமானங்கள் உள்ளே புகுந்ததாக கூறப்படுகிறது. சுமார் 7 நிமிடங்கள் அவை இந்திய எல்லைக்குள் இருந்தது என்றும் கூறுகிறார்கள். இதையடுத்து அந்த பகுதிக்கு இந்திய போர் விமானங்கள் வேகமாக சென்று இருக்கிறது.
தாக்கியது
ஆனால் இந்திய விமானங்கள் அங்கு செல்லும் முன் காஷ்மீரில் ராஜூரி விமானப்படை கட்டிடம் அருகே பாக். விமானம் குண்டு வீசியது. விமானப்படை கட்டிடம் அருகேயே இந்த குண்டு விழுந்துள்ளது. பாக். விமானப்படை தாக்குதலில் உயிர்சேதம் ஏற்படவில்லை என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
விரட்டினர்
இந்த நிலையில் இந்திய வான் எல்லைக்குள் நுழைய முயன்ற அந்த பாக். விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளது. எல்லைக்குள் நுழைந்து மோசமாக தாக்க முயன்ற எப்-16 ரக விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளது. இந்திய போர் விமானங்கள் சுற்றி வளைத்ததை அடுத்து பாக். விமானங்கள் திரும்பி சென்றது என்று கூறப்படுகிறது.