"கள்ளாட்டம்" ஆடி விட்டார்கள் நடுவர்கள்.. இந்தியாவிடம் கபடிப் போட்டியில் தோற்ற பாகிஸ்தானின் அழுகாச்சி
அமிர்தசரஸ்: உலகக் கோப்பைக் கபடிப் போட்டியில் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் மயிரிழையில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் தங்களது தோல்விக்கு நடுவர்களின் பாரபட்சமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
அவர்கள் இந்தியா ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, இந்தியாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதால்தான் தாங்கள் தோல்வி அடைய நேரிட்டதாக பாகிஸ்தான் கேப்டன் ஷபீக் சிஸ்டி கூறியுள்ளார்.

அமிர்தசரஸ் நகரில் சனிக்கிழமையன்று உலகக் கோப்பை கபடி இறுதிப் போட்டி நடந்தது. அதில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதில் 45-42 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று 5வது முறையாக உலக கோப்பையை வென்றது. ஆனால் போட்டி முடிவில் நடுவர்கள் மீது பாகிஸ்தான் கேப்டன் குற்றம் சாட்டினார். மேலும் 2வது இடத்தைப் பெற்றதற்காக வழங்கப்பட்ட பரிசுத் தொகையையும் பாகிஸ்தான் அணி எதிர்ப்பு தெரிவித்த பின்னர் பெற்றது.
பாகிஸ்தான் கேப்டன் ஷபீக் கூறுகையில், பாகிஸ்தான் அணி வென்று விடக் கூடாது என்ற நோக்கத்தில் நடுவர்கள் செயல்பட்டுள்ளனர். எங்களை தண்ணீர் குடிக்கக் கூட நடுவர்கள் அனுமதிக்கவில்லை. 3வது நடுவர் எங்களை மிரட்டவும் செய்தார். வேகமாக விளையாடுமாறு நிர்பந்தித்தனர்.
மேலும் ஆட்டத்தையும் வேகமாக முடித்து விட்டனர். இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இவ்வாறு அவர்கள் நடந்து கொண்டனர் என்றார் ஷபீக்.
முன்னதாக, உலகக் கோப்பையை வென்ற இந்தியாவுக்கு 2 கோடியும், 2வது இடம் பிடித்த பாகிஸ்தானுக்கு ரூ. 1 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.
சமீபத்தில் சாம்பியன்ஸ் லீக் ஹாக்கி போட்டியின் அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி, இந்தியாவைத் தோற்கடித்தது. இதையடுத்து ரசிகர்களைப் பார்த்து பாகிஸ்தான் வீரர்கள் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினர். இந்த நிலையில் தற்போது கபடி உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான், இந்திய நடுவர்களை குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்?












Click it and Unblock the Notifications