அம்மாவும் அப்பாவும் மதம் மாற கட்டாயப்படுத்தறாங்க.. மகள் கொடுத்த பகீர் புகார்.. 11 பேர் கைது!
போபால்: 24 வயது பெண்ணை கட்டாயமாக கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற முயன்ற வழக்கில் அந்த பெண்ணின் பெற்றோர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்தூரைச் சேர்ந்தவர் ராகேஷ் கவுசல் . இவரது மனைவி ராணி கவுசல். இவர்களுக்கு ஷாலினி (24) என்ற மகள் உள்ளார். இவர்கள் இந்து மதத்தை பின்பற்றி வருகிறார்கள். இந்த நிலையில் ஷாலினியை அவரது பெற்றோர் நேற்று முன் தினம் இந்திராபுரியில் உள்ள ஒரு சர்ச்சில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக அழைத்து சென்றனர்.
ஆனால் அங்கு அவரை பெற்றோர் இருவரும் கட்டாயம் மதமாற வற்புறுத்தினர். இதற்கு மறுத்த ஷாலினியை சில பெண்கள் அடித்து மதமாற வற்புறுத்தியதாகவும் இவரை போல் மேலும் இருவரை கட்டாய மதமாற்றம் செய்ததாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கட்டாய மதமாற்றத்திற்கு தங்களை கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வந்த வண்ணம் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். அந்த தேவாலயத்தின் பாதிரியார் பாபு ஜோசப் கூறுகையில் தேவாலய வளாகத்தில் மதமாற்றும் மையம் இருக்கிறது. ஆனால் அங்கு நடப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கட்டாய மதமாற்றத்திற்கு தங்களை கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வந்த வண்ணம் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். அந்த தேவாலயத்தின் பாதிரியார் பாபு ஜோசப் கூறுகையில் தேவாலய வளாகத்தில் மதமாற்றும் மையம் இருக்கிறது. ஆனால் அங்கு நடப்பது குறித்து எனக்கு எதவும் தெரியாது.
எந்தவித அனுமதியும் பெறாமல் பல நிகழ்ச்சிகளை அந்த மையம் நடத்தலாம். ஆனால் கட்டாய மதமாற்றம் குறித்து எனக்கு தெரியாது. இதுகுறித்து விசாரிக்கிறேன் என்றார் ஜோசப்.