திடீரென குலுங்கிய ஜம்மு காஷ்மீர்.. வீதிக்கு ஓடிய பொதுமக்கள்! நிலநடுக்கத்தால் பீதி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ரிக்டர் அளவில் 4.1 என்கிற அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் இன்று மதியம் 12.26 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டிருப்பதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் அறிவித்திருக்கிறது. நிலநடுக்கம் லேசாக பதிவாகியிருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

Jammu and Kashmir Earthquake Srinagar

டெக்டானிக் பிளேட்டுகளின் நகர்வுகளே நிலநடுக்கம் ஏற்படுவதற்கு பொதுவான காரணமாக சொல்லப்படுகிறது. அதாவது பூமியின் மீது நிலத்தட்டுக்கள் இருக்கின்றன. இதைத்தான் விஞ்ஞானிகள் டெக்டானிக் பிளேட் என்று கூறுகின்றனர். ஒரு காலத்தில் இவை அனைத்தும் இணைந்து ஒரே தட்டாக பெரிய நிலப்பரப்பாக இருந்தது. ஆனால், கால மாற்றத்தில் இது உடைந்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கமாக சென்றுவிட்டது. இப்படித்தான் ஏழு பெரும் கண்டங்கள் உருவாகின.


இதில் சேராத நிலப்பரப்புகள் தீவுகளாக மாறின. சில நேரங்களில் இந்த நிலப்பரப்புகள் மெல்ல நகர்ந்து பெரிய நிலப்பரப்பின் மீது மோதுவதுண்டு. தற்போது இருக்கும் இமயமலையும் இப்படித்தான் உருவாகியிருக்கிறது. இந்திய நிலப்பரப்பு ஆசிய கண்டத்துடன் மோதியதால் இமயமலை உருவாகியுள்ளது. இந்த மோதல் இன்றும் நீடித்து வருகிறது. எனவே ஆண்டுக்கு சில இன்ச் அளவுக்கு இமய மலையின் உயரம் கூடிக்கொண்டே வருகிறது.


அதேநேரம் லேசான நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன. இப்படித்தான் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+