என் உசுருக்கு ஏதாவது ஆச்சுன்னா... மோடி தான் காரணம்.. குண்டை தூக்கி போடும் அன்னா ஹசாரே
அகமது நகர்:காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, தமக்கு ஏதாவது நேர்ந்தால் பிரதமர் மோடி தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்ற உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும் இன்னும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிறைவேற்ற வில்லை. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின், லோக்பால் நீதிபதி யாரும் நியமிக்கப்படவில்லை.

எனவே, மத்தியில் லோக்பாலும், மாநிலங்களில் லோக் ஆயுக்தாவும் நிறை வேற்றாததை கண்டித்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக சமீபத்தில் பிரதமர் மோடிக்கு அன்னாஹசாரே கடிதம் எழுதினார். அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க கோரியும் அவர் வலியுறுத்தி வந்தார்.
இந் நிலையில் அறிவித்தபடி காந்தியவாதி அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். அகமது நகர் மாவட்டத்தில் உள்ள தனது, கிராமமான ரலேகான் சித்தியில் காந்தி நினைவு தினமான ஜனவரி 30-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
அன்னா ஹசாரேவின் உண்ணா விரத போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.இந் நிலையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அன்னா ஹசாரே கூறியதாவது:மக்கள் என்னை பிரச்னைகளை சந்தித்தவராகவே நினைவு கூறுவார்கள்.
மாறாக, பிரச்னையை பெரிதாக்குபவராக அல்ல. எனக்கு ஏதாவது நடந்தால், அதற்கு பிரதமர் மோடியே முழு பொறுப்பேற்க வேண்டும். மேலும், லோக்பால் சட்டத்தின் மூலம் மக்கள் எவரேனும் தக்க ஆதாரத்துடன் புகார் அளித்தால் பிரதமரையும் விசாரிக்க முடியும்.
அதேபோல் லோக் ஆயுக்தா சட்டத்தின் மூலம் சரியான ஆதாரங்கள் இருந்தால் முதல்வர்களையும், அமைச்சர்களையும் விசாரிக்க முடியும். அதனால் தான், எந்த அரசும் இச்சட்டங்களை அமல்படுத்த தயாராக இல்லை என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications