தினசரி பெட்ரோல் விலை நிர்ணயத்திற்கு எதிர்ப்பு.. ஜூலை 12-ல் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஸ்டிரைக்
சென்னை: நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதால் இழப்பு ஏற்படுவதாக கூறி ஜூலை 12ந் தேதி அகில இந்திய பெட்ரோல் டீலர்கள் சங்கம் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வந்தன.

இதனிடையே பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைக்கும் முறை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதால் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுவதாக கூறி ஜூலை 12ந் தேதி அகில இந்திய பெட்ரோல் பங்க் டீலர்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
அன்றைய தினம் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதும் இல்லை. விற்பனை செய்யப்போவதும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications