போர் விமானத்தில் பறக்கும் திட்டம் மோடியிடம் இல்லை: பாதுகாப்புத்துறை மறுப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூரில் நடைபெறவுள்ள ஏரோ இந்தியா ஷோவின்போது போர் விமானத்தில் பிரதமர் மோடி பறக்கவுள்ளதாக வெளியான செய்திகளை பாதுகாப்புத்துறை மறுத்துள்ளது.

அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று பாதுகாப்புத்துறை மறுத்துள்ளது. ஏரோ இந்தியா 2015 ஷோவின்போது ரஃபேல் ரக போர் விமானத்தில் மோடி பறக்கவுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து விளக்கியுள்ள மத்திய பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் சிதன்ஷு கர் கூறுகையில், பிரதமர் மோடி ரஃபேல் ரக விமானத்தில் பறக்கவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மையற்றது.

PM has no plans to fly any jets during Aero India: MoD

பிரதமர் மோடி எந்த வகையான போர் விமானத்திலும் பறக்கும் திட்டத்தில் இல்லை. இந்த செய்தி தவறானது, அடிப்படை இல்லாதது என்று அவர் விளக்கியுள்ளார்.

ஏரோ இந்தியா ஷோவுக்கும், மத்திய பாதுகாப்புத்துறை மேற்கொள்ளும் விமான கொள்முதலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

பல்வேறு நாடுகளின் விமானங்கள் ஏரோ இந்தியாவில் காட்சிப்படுத்தப்படுகின்றன. பாதுகாப்புத் தளவாட உற்பத்தியாளர்கள் தங்களது படைப்புகளை இங்கு காட்சிக்கு வைக்கிறார்கள்.இத்துறையில் ஏற்பட்டுள்ள நவீனங்களை அறிய இது ஒரு வாய்ப்பு என்றார் அவர்.

போர் விமானத்தில் மோடி பறக்கப் போவதாக வெளியான செய்தியைப் பார்த்து பிரதமர் அலுவலகம் அப்செட் ஆகி விட்டதாம். இது மிகவும் தவறான செய்தி என்றும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த செய்தி தொடர்பா்க சனிக்கிழமை முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேலும் சுகோய் விமானம் இருக்க ஏன் ரஃபேல் விமானத்தை மோடி தேர்ந்தெடுத்தார் என்றும் விவாதங்கள் கிளம்பின.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+