பீகாரில் மீண்டும் முதல்வராக நிதிஷ்குமார்... தொலைபேசியில் மோடி, ட்விட்டரில் அமித்ஷா வாழ்த்து
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் வென்று மீண்டும் முதல்வராகியுள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் ட்விட்டரில் நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
பீகாரில் எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பணியாற்றியது பா.ஜ.க. இதற்காக ஒரு மாத காலத்துக்கும் மேலாக பா.ஜ.க. தலைவர் அமித்ஷா அங்கேயே முகாமிட்டு பணியாற்றினார்.

பிரதமர் மோடியும் பல பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு மிகக் கடுமையாக பிரசாரம் செய்தார். ஆனால் எதுவும் கைகொடுக்காமல் கடந்த தேர்தலை விட படுதோல்வியையே சந்தித்துள்ளது பா.ஜ.க. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அமோக வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகியுள்ளார் நிதிஷ்குமார்.
Had a telephone conversation with Shri @nitishkumar & congratulated him on the victory.
— Narendra Modi (@narendramodi) November 8, 2015 இந்நிலையில் நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் நிதிஷ்குமாருக்கு பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications