மோடிக்கு போட்டோ எடுக்கவே நேரம் சரியா இருக்கு.. இதுக்கு எங்க நேரம் இருக்கு.. ராகுல் பரபர டிவிட்!
மேகாலயா சுரங்கத்தில் சிக்கி இருக்கும் 14 ஊழியர்களை குறித்து பிரதமர் மோடி கவலையே படவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ஷில்லாங்: மேகாலயா சுரங்கத்தில் சிக்கி இருக்கும் 14 ஊழியர்களை குறித்து பிரதமர் மோடி கவலையே படவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கடந்த 12ம் தேதி மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீர் என்று சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குகைக்குள் இருந்த 14 பேரும் நீரில் சிக்கினார்கள்.
18 நாட்களுக்கு முன் சிக்கிய இந்த ஊழியர்களை இன்னும் மீட்க முடியாமல் மீட்பு படையினர் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

பணி நிறுத்தம்
அதேபோல் சுரங்கத்திற்குள் உள்ள தண்ணீரை வெளியே எடுப்பது மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் தற்போது இருக்கும் பம்ப்களை வைத்து நீரை வெளியேற்ற முடியாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். புதிய திறன் கொண்ட பம்ப் வந்த பின்பே மீட்பு பணி நடக்கும் என்று கூறியுள்ளனர். இதனால் மீட்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது.

அரசு மீது குற்றச்சாட்டு
இந்த நிலையில் மத்திய அரசு இந்த மீட்பு பணியில் சரியாக ஈடுபடவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய அரசு மீட்பு பணிக்காக போதுமான பொருட்களை அனுப்பவில்லை, மீட்பு படையினரை அனுப்பவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.
|
ராகுல் டிவிட்
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், 15 ஊழியர்கள் சுரங்கத்திற்குள் இரண்டு வாரத்திற்கு முன் மாட்டிக் கொண்டு காற்று கூட இல்லாமல் தவிக்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி போகிபீல் பாலத்தில் நின்று கொண்டு கேமராவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். அவரின் அரசு ஒரு உயர் அழுத்த பம்ப் தயார் செய்ய கூட தயாராக இல்லை. பிரதமரே கொஞ்சம் ஊழியர்களை காப்பாற்றுங்கள்,என்று கூறியுள்ளார் .
|
இவரும் கோபம்
மேகாலயாவில் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டதை அடுத்து இவர் ''என்ன ஒரு அவமானம், பம்ப் இல்லை என்று மீட்பு பணிகளை நிறுத்துவதா, இந்தியாவில் பம்ப் கிடைப்பது அத்தனை சிரமமான காரியமாகிவிட்டதா, இல்லை இந்தியாவில் மனித தன்மையே இல்லாமல் போய்விட்டதா'' என்று கேள்வி கேட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications