100வது பிறந்த நாளை கொண்டாடும் மோடியின் தாயார்! நேரில் சந்தித்து ஆசி பெற்ற பிரதமர்! பாத பூஜை செய்தார்

Subscribe to Oneindia Tamil

காந்தி நகர்: பிரதமர் மோடியின் தாயார் ஹிராபா இன்று 100ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

நாட்டின் 14ஆவது பிரதமராகக் கடந்த 2014இல் நரேந்திர மோடி. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்தடுத்து இரு தேர்தல்களில் மோடியை முன்னிறுத்தியே பாஜக தனிப்பெரும்பான்மை உடன் வெற்றி பெற்றுள்ளது.

 PM Modi meets his mother Heeraben in Gandhinagar on her birthday

சர்வதேச அளவில் முக்கிய தலைவர்களில் ஒருவராகத் திகழும் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபா இப்போது குஜராத் மாநிலத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் இன்று தனது 100ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி காந்திநகரில் உள்ள இல்லத்தில் தனது தாயார் ஹிராபாவை காலை சந்தித்து ஆசி பெற்றார்.

மேலும், ஹிராபாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாத பூஜையும் செய்தார். அவரது பிறந்த நாளையொட்டி வட்நகரில் உள்ள ஹட்கேஷ்வர் கோவிலில் சிறப்புப் பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. ஹிராபா நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என வேண்டி குஜராத்தில் பல இடங்களில் சிறப்புப் பூஜைகளும் நடைபெறுகிறது.

இந்தச் சூழலில் குஜராத் தலைநகர் காந்தி நகரில் உள்ள சாலை ஒன்றுக்குப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபாவின் பெயரை வைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபாவின் பெயர் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கச் செய்யவும் வருங்கால சந்ததியினர் அவரிடம் இருந்து பாடம் கற்கும் வகையிலும் அவரது பெயரைச் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+