நீதிபதிகள் செய்வது புனிதமான பணி: பிரதமர் மோடி புகழாரம்
டெல்லி: நமது நாட்டின் நீதிபதிகள் கடவுளுக்கு அடுத்தபடியாக புனிதமான பணியை மேற்கொள்கின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற நீதிபதிகள் மற்றும் முதல்வர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

எனக்கு இந்த மாநாடு குறித்து நன்றாகவே தெரியும். முன்னதாக நான் முதல்வர்கள் வரிசையில் அமந்து இருந்திருக்கிறேன்.
இன்று இங்கு அமர்ந்து உள்ளேன். இம்மாநாட்டின் யோசனைகள் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும், ஒருவருக்கொருவர் வலுப்படுத்துவது ஆகிறது, இந்தியாவின் கரத்தை வலுப்படுத்தும்.
இதுபோன்ற மாநாடில் ஏற்கனவே பேசியவற்றை நான் மீண்டும் கூறுவதற்கு விரும்பவில்லை. எல்லா மாநாட்டிலும் அமர்ந்து இருக்கும் ஒவ்வொருவரும் ஊழல் விவகாரம் தொடர்பான கவலையை எழுப்புகின்றனர். ஒவ்வொருவரும் கவலை அடைந்து உள்ளனர்.
ஆனால் இதுவரையிலும் தீர்வு காணப்பட முடியவில்லை. இது சாத்தியமாகும், இந்த மாநாட்டால் தீர்வு காணப்படமுடியும்.
சட்டம் மற்றும் ஒழுங்கு துறையில் உள்ளவர்கள் தெய்வீகமான பணியினை ஆற்றுகின்றனர். கடவுள் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் செய்கிறீர்கள். கடவுளுக்கு அடுத்தப்படியாக வைத்து மதிக்கப்படுபவர்கள் நீதிபதிகள், புனிதமான பணியினை செய்பவர்கள் நீதிபதிகள்.
சட்டம் ஒழுங்கு துறையில் உள்ள மக்கள் பொறுப்பு கொண்டுள்ளனர், அவர்கள் மற்றமக்கள் பார்க்கக்கூடியவர்கள். நீதிதுறையின் மீது மக்கள் பெரிதும் நம்பிக்கை வைத்து உள்ளனர். ஏழைகளுக்கு நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். கால மாற்றத்திற்கு ஏற்ப புதிய மாற்றங்களை நீதித்துறை கையாளவேண்டும்
நாம் சட்டம் மற்றும் ஒழுங்கை கொண்டு உள்ளோம், மனிதவளமும் கொண்டு உள்ளதில் நாம் அதிர்ஷ்டசாலி ஆவோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications