18 லட்சம் போலீசாருக்கு குடியரசு தின வாழ்த்து- எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்புகிறார் மோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குடியரசு தினத்தன்று நாட்டில் உள்ள மொத்தம் 18 லட்சம் போலீசாருக்கும் தனித்தனியாக வாழ்த்து தெரிவிக்க திட்டமிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
அதாவது அவர்கள் அனைவருக்கும் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் வாழ்த்து செய்தி அனுப்ப உள்ளார். டி.ஜி.பி. முதல் கான்ஸ்டபிள் வரை அனைவருக்கும் அவர் எஸ்.எம்.எஸ். அனுப்ப போகிறார்.

இந்த தனது விருப்பத்தை சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் நடந்து முடிந்த டி.ஜி.பிக்கள் மாநாட்டில் மோடி தெரிவித்தார். குடியரசு தினத்துக்கு முன்பாக அனைத்து போலீசாரின் செல்போன் எண்களை சேகரித்து தருமாறு அனைத்து மாநில டி.ஜி.பிக்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் ஒருவர் நாடு முழுவதும் உள்ள எல்லா போலீசாரையும் எஸ்.எம்.எஸ் மூலமாக நேரடியாக வாழ்த்துவது இதுவே முதன் முறையாகும்.












Click it and Unblock the Notifications