Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்தம் 77 அடி.. உலகிலேயே உயரமான ராமர் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி.. பிரமாண்டத்தின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

பனாஜி: கோவாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண ஜீவோத்தம் மடத்தில் உலகிலேயே மிக உயரமான ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த சிலை மொத்தம் 77 அடி உயரம் கொண்டது. சிலை முழுவதும் வெண்கலத்தால் செதுக்கப்பட்டுள்ள நிலையில் சிலையின் சிறப்பம்சம் பற்றி முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண ஜீவோட்டம் மடம் அமைந்துள்ளது. பர்தகல் என்ற கிராமத்தில் இந்த மடம் அமைந்துள்ளது.

pm-modi-unveils-77-foot-lord-ram-bronze-statue-in-goa

இந்த மடம் 570 ஆண்டுகால பாரம்பரியத்தை கொண்டதாக கூறப்படுகிறது. இங்கு உலகிலேயே மிக உயரமான ராமர் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 77 அடி உயரத்தில் பிரமாண்டமான வெண்கல ராமர் சிலை செதுக்கப்பட்டது. இந்த சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிராண பிரதிஷ்டை பூஜைகள் நடைபெற்றது. பிரதமர் மோடி விழாவில் பங்கேற்று சிலையை திறந்து வைத்தார்.

இந்த சிலையை உருவாக்கிய சிற்பியின் பெயர் ராம் சுதார். இவர் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர். இவர் மிகவும் பிரபலமான சிற்பி ஆவார். இவர் தான் குஜராத்தின் ஒற்றுமைக்கான சிலை (வல்லபாய் படேல்) வடிவமைத்தவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இந்த மடம் தனது 570 ஆண்டு கால பாரம்பரியத்தை போற்றும் வகையில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று தொடங்கிய விழா டிசம்பர் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவின் ஒரு பகுதியாக தான் பிரதமர் மோடி ராமர் சிலையை இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் ஆளுநர் அசோக் கஜபதி ராஜு, முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் மற்றும் கோவா அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+