பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி கொரோனாவால் மரணம்.. அகமதாபாத்தில் சோகம்!
அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி கொரோனாவால் அகமதாபாத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 80.
Recommended Video
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிய ரனிப் பகுதியைச் சேர்ந்தவர் நர்மதா பென் (80). இவர் பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை தாமோதரதாஸின் சகோதரர் ஜெகஜீவன் தாஸின் மனைவியாவார். நரேந்திர மோடிக்கு சித்தி முறையாவார்.
இந்த நிலையில் நர்மதா பென் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவர் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து அவர் நேற்று காலமானார். இந்த தகவலை மோடியின் இளைய சகோதரர் பிரஹலாத் மோடி உறுதி செய்தார்.
18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட நாளை முதல் கோவின் செயலியில் முன்பதிவு தொடக்கம்!
நர்மதா பென்னின் மறைவுக்கு பாஜக எம்பி ஜோதிராதித்ய சிந்தியா இரங்கல் ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி நர்மதா பென் இறந்ததை அறிந்து மிகவும் துயரமடைந்தேன். அவருக்கு ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.