145-வது பிறந்த நாள்: காந்தி நினைவிடத்தில் சோனியா, மன்மோகன் அஞ்சலி! ராகுல் புறக்கணிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மகாத்மா காந்தியின் 145-வது பிறந்த நாள் விழாவையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ஆனால் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.

மகாத்மா காந்தியின் 145-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடமானது மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இன்று காலை காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களுடன் மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களும் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஆனால் டெல்லியில் இருந்தும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிலை.

Sonia Gandhi

தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏக்களின் பதவியை பறிக்கும் உத்தரவில் இருந்து அவர்களை காப்பாற்றும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்து இருந்தது. இந்த அவசர சட்டம் முட்டாள் தனமானது. அதை கிழித்து எறிய வேண்டும் என்று ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

இதனால் ராகுல்காந்தி, மன்மோகன்சிங் இடையே அதிருப்தி உருவாகி உள்ளது. இதனாலேயே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பிரதமருடன் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+