Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளி நிர்வாகத்திற்கு ஆட்டம் காட்ட வெடிகுண்டு புரளியை கிளப்பிவிட்ட 4 மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

காசியாபாத்: உத்தர பிரதேசத்தில் பள்ளி நிர்வாகத்திற்கு ஆட்டம் காட்ட 4 மாணவர்கள் வெடிகுண்டு புரளியை கிளப்பிவிட்டனர்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ளது சவுதரி சபீல் தாஸ் பப்ளிக் பள்ளி. அந்த பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 4 மாணவர்கள் நிர்வாகத்தினருக்கு ஆட்டம் காட்ட விரும்பினார்கள். இதையடுத்து அவர்கள் பள்ளியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக செல்போன் மூலம் 2 முறை தகவல் தெரிவித்தனர்.

Police Detains 4 Students For Ghaziabad School Hoax Bomb Call

இதையடுத்து பள்ளியில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் உடனே வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தியதில் குண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.

போலீஸ் விசாரணையில் போன் செய்த 4 மாணவர்களும் சிக்கினர். மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து போலீசார் அவர்களை கண்டித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மாணவர்கள் செய்த விஷமத்தால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+