பள்ளி நிர்வாகத்திற்கு ஆட்டம் காட்ட வெடிகுண்டு புரளியை கிளப்பிவிட்ட 4 மாணவர்கள்
காசியாபாத்: உத்தர பிரதேசத்தில் பள்ளி நிர்வாகத்திற்கு ஆட்டம் காட்ட 4 மாணவர்கள் வெடிகுண்டு புரளியை கிளப்பிவிட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ளது சவுதரி சபீல் தாஸ் பப்ளிக் பள்ளி. அந்த பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 4 மாணவர்கள் நிர்வாகத்தினருக்கு ஆட்டம் காட்ட விரும்பினார்கள். இதையடுத்து அவர்கள் பள்ளியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக செல்போன் மூலம் 2 முறை தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பள்ளியில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் உடனே வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தியதில் குண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.
போலீஸ் விசாரணையில் போன் செய்த 4 மாணவர்களும் சிக்கினர். மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து போலீசார் அவர்களை கண்டித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மாணவர்கள் செய்த விஷமத்தால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications