For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்சிக்கு வந்தால்.. தேர்தல் ஆணையர்களை ஜெயிலில் போடுவோம்... அம்பேத்கர் பேரன் சர்ச்சை பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் ஆணையர்களை ஜெயிலில் போடுவோம்-அம்பேத்கர் பேரன் சர்ச்சை பேச்சு

    மும்பை: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் ஆணையர்களை இரண்டு நாளைக்கு சிறையில் போடுவோம் என சர்ச்சைக்குரிய வகையில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் பேசியுள்ளார்.

    அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாதி கட்சி, அம்பேத்கர் முன்னணி பரீப் பகுஜன் மகாசங் மற்றும் அசாதுதீன் ஓவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இணைந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவை தொகுதியிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் பிரகாஷ் அம்பேத்கர் சோலப்பூர் மற்றும் அகோலா ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

    Prakash Ambedkar says Will Jail Election Commission If Voted To Power

    வியாழக்கிழமை மகாராஷ்டிராவின் யமத்மாலில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் பிரகாஷ் அம்பேத்கர் பேசுகையில், "புல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை இழந்துள்ளோம். ஆனால் அமைதியாக இருக்க வேண்டுமாம். இந்த தாக்குதல் குறித்து பேசக்கூடாது என்கிறார்கள். தேர்தல் ஆணையம் எப்படி எங்களை இப்படி சொல்லலாம். சட்டப்படி இதைப்பற்றி பேச உரிமை உள்ளது. நான் பாஜகவை சேர்ந்தவன் கிடையாது. ஒருவேளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேர்தலை ஆணையர்களை இரண்டு நாளைக்கு சிறை வைப்போம். இந்த தேர்தல் ஆணையம் பொதுவாகச் செயல்படுகிறது என்று யாரும் எண்ண வேண்டாம். அது, ஆளும் மத்திய பாஜக அரசுக்கு மட்டுமே ஆதரவாகச் செயல்படுகிறது" இவ்வாறு கூறினார்.

    மேலும் பிரகாஷ் அம்பேத்கர் பேசுகையில் தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மோடியால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பணம் மீண்டும் செல்லும் என அறிவிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

    சட்டமேதை அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர் இப்படி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் தேர்தல் அதிகாரிகளிடம் பிரகாஷ் அம்பேத்கரின் பேச்சு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. இதனிடையே தான் ஒரு விஷயத்தை பொதுவாக சொன்னதாகவும் தேர்தல் ஆணையம் பற்றி கருத்து மட்டும் மிகைப்படுத்தப்பட்டதாகவும் பிரகாஷ் அம்பேத்கர் விளக்கம் அளித்துள்ளார்.

    English summary
    Vanchit Bahujan Aghadi leader Prakash Ambedkar says Will Jail Election Commission If Voted To Power
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X