9 மாதம் பிரசவ விடுப்பு கேட்ட பெண் டாக்டர்.. வேலை காலி!
ஷில்லாங்: மேகாலயாவில் ஒன்பது மாத பிரசவ விடுப்பு கேட்டதால், தனது வேலையை இழந்துள்ளார் பெண் டாக்டர் ஒருவர்.
மேகாலய மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் இயங்கி வரும் ஹோர்டன் ராபர்ட்ஸ் மருத்துவமனையில் பல் டாக்டராக பணி புரிந்து வந்தவர் ரசெல் ரா ரப்சங்க். கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கு அவர் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் பிரசவ விடுப்பு வேண்டி அவர் விண்ணப்பித்துள்ளார். ஆனால், விடுப்பிற்கு அனுமதி அளித்து கடிதம் வருவதற்கு பதிலாக அவர் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பித் தர சொல்லி அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் கடிதம் அனுப்பியது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரசெல், இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்துள்ளார். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கத்தில், ‘நீங்கள் இங்கு ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணியில் உள்ளீர்கள். உங்களது ஒப்பந்தம் ஜூன் 1ம் தேதியுடன் முடிந்து விட்டது. எனவே, உங்களுக்கு பிரசவ விடுப்பு அளிக்க இயலாது. நீங்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து வாங்கிய அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு, வேலையில் இருந்து விலகிக் கொள்ளலாம்' என கூறப்பட்டது.
இதனால், கர்ப்பிணியான ரசெல் தனது வேலையை இழந்தார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் கூறுகையில், 'கடந்த ஐந்து ஆண்டுகளாக ரசெல் இங்கு பணி புரிந்து வந்தார். அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தோடு தான் அவரது ஒப்பந்தம் நிறைவடைகிறது' எனத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், ‘நாங்கள் தனியார் மருத்துவமனை நடத்தவில்லை. ஒன்பது மாத கால விடுப்பு என்பது அதிகப்படியான விடுமுறை. வேண்டுமானால் மீண்டும் ரசெல் இங்கு பணிக்கு விண்ணப்பிக்கலாம்' எனத் தெரிவித்துள்ளது.
மேகாலய மகளிர் ஆணைய முன்னாள் உறுப்பினர் யாங்கி இது தொடர்பாக கூறும் போது, ‘பெண்களுக்கு என்று சில அடிப்படை உரிமைகள் உள்ளன. அவற்றை யாரால் மறுக்க முடியாது' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்குத் தொடுக்கவும் ரசெலுக்கு உரிமை உள்ளது என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications