For Daily Alerts
Just In
பெண் குழந்தை பிறக்கும் என ஜோதிடர் கணிப்பு.. கர்ப்பிணியை உயிரோடு கொளுத்திய கணவர் குடும்பத்தார்
நெல்லூர்: ஆந்திர மாநிலத்தில் கர்ப்பிணி பெண்ணை உயிருடன் உறவினர்கள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்த முதற்கட்ட தகவல் தெரிவிப்பதாவது: கர்ப்பிணி பெண் ஒருவர் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறக்கும் என ஜோதிடர் கணித்து கூறியுள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக கணவர் வீட்டு உறவினர்கள் அப்பெண்ணை கர்ப்பிணி எனக்கூட பார்க்காமல் தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், தீக் காயமடைந்த காயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவலறிந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலதிக தகவல்கள் வர வேண்டியுள்ளது.
Comments
English summary
In a tragic incident, a pregnant woman was set ablaze in Andhra Pradesh's Nellore area.
Story first published: Thursday, September 1, 2016, 13:45 [IST]