சீனா அத்துமீறினால்.. ஆக்ரோஷமான பதிலடி கொடுக்க தயார்.. விமானப்படை தளபதி பதாரியா திட்டவட்டம்
ஜோத்தப்பூர்: எல்லைப் பகுதிகளில் சீனா அத்துமீறினால் அதற்கு ஆக்ரோஷமான முறையில் பதிலடி கொடுக்க எப்போதும் தயாராக உள்ளதாக இந்திய விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அதிலும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கல்வான் மோதலுக்குப பிறகு நிலைமை பல மடங்கு மோசமாகியுள்ளது.
இரு நாடுகளும் எல்லையில் தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வருகின்றனர். இதனால் எல்லையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராணுவத்தைப் பின்வாங்குவது குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளிலும் இதுவரை எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

எல்லையில் கட்டுமானம்
இந்நிலையில், அருணச்சால பிரதேச எல்லையில் சுமார் 100 வீடுகளைக் கொண்ட ஒரு கிராமத்தையே சீனா கட்டியது தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானது. அருணச்சால பிரதேசம் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறிய சீனா, அதில் கட்டுமானம் மேற்கொள்வதில் தவறில்லை என்றது. இது குறித்துப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், கடந்த சில மாதங்களாகவே எல்லைப்பகுதிகளில் இந்தியாவும் கட்டுமானங்களை அதிகப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

ஆக்ரோஷமான பதிலடி
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்தப்பூரில் விமானப்படை தளபதி பதாரியா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் எல்லைப்பகுதிகளில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து விமானப்படை கவனித்து வருகிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதலிளத்த அவர், "எல்லையில் சீனா அத்துமீறினால், அதற்கு ஆக்ரோஷமான முறையில் பதிலடி கொடுக்கப்படும். இந்திய விமானப்படை இதற்கு எப்போதும் தாயாராகவே உள்ளது" என்றார்.

சீன எல்லையில் விமானப்படை பயிற்சி
இந்தியா மற்றும் பிரான்ஸ் விமானப்படை இணைந்து ராஜஸ்தானில் டெஸர்ட் நைட் 21 என்ற பெயரில் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுகின்றன. அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பதாரியா இதனைத் தெரிவித்தார். மேலும், தற்போது இதேபோல கிழக்கு எல்லையிலும்(சீன எல்லை) பயிற்சி மேற்கொள்ளப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "இந்தக் கூட்டுப் பயிற்சி எந்த நாட்டு எதிரானது இல்லை. திறனை வளர்ப்பதும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதும் மட்டுமே இதன் நோக்கம். அதேநேரம் அங்கும் கடுமையான பல பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

கூடுதலாகப் போர் விமானங்கள்
தொடர்ந்து ரபேல் விமானங்கள் குறித்துப் பேசிய அவர், "தற்போது நம்மிடம் 8 ரபேல் போர் விமானங்கள் உள்ளன. அடுத்த மாதம் மேலும் மூன்று விமானங்கள் வரவுள்ளன. இந்த விமானங்களில் தற்போது விமானிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். அடுத்தாண்டு இந்த ரபேல் விமானங்கள் விமானப்படையில் சேர்த்துக்கொள்ளப்படும். நமது விமானப்படையைப் பலப்படுத்தக் கூடுதலாக 114 போர் விமானங்களை விரைவில் வாங்கவுள்ளோம். அதிலும் ரபேல் விமானங்களை வாங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்று கூறினார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications