முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு ஜனாதிபதி, மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 68. முதல்வர் ஜெயலலிதா காலமான செய்தியை அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் சுரேஷ் பிரவு, நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் வளர்சிக்கு அளப்பறிய பணியை செய்தவர் முதல்வர் ஜெயலலிதா என்று குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
.