அடுத்த வாரம் சபரிமலைக்கு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.. கோயில் அருகே ஹெலிபேட்?
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் சுவாமியை தரிசனம் செய்ய சரிமலைக் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் ஜனவரி 5ம் தேதி வருகிறார். அவருக்காக கோயில் அருகே ஹெலிபேட் அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் தமிழ் மாதமான கார்த்திகை மற்றும் மார்கழியில் முழுமையாக திறந்திருக்கும். தைமாதம் முதல் வாரம் திறந்திருக்கும் மற்றபடி ஒவ்வொரு தமிம் மாதத்தின் முதல் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே திறக்கப்படும்.

கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் சன்னதி முழுமையாக திறக்கப்டும் என்பதால் அந்த சமயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தரிசிக்க வருவார்கள்.
இந்நிலையில் மண்டல விளக்கு பூஜை கடந்த டிசம்பர் 27ம் தேதி ஐயப்பன் கோவிலில் நடந்தது. அதன்பிறகு நடை சாத்தப்பட்டு மீண்டும் டிசம்பர் 30ம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 21ம் தேதி வரை திறந்திருக்கும்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த வரும் ஜனவரி 5ம் தேதி ஞாயிற்றுக்கிமை சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வருகை தர விரும்புகிறார். இதற்காக கேரள மாநில தேவசம் போர்டு அமைச்சர் கடம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் அதிகாரிகள் குழு பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியது. கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சபரிமலை சன்னிதானம் அருகேயே தரையிறங்க வாய்ப்பு உள்ளதாம். அவருக்காக ஹெலிபேட் அமைத்து அதில் தரையிறங்க ஏற்பாடுகள் நடக்கிறதாம். சன்னிதானம் அருகே ஹெலிபேட் அமைக்கப்பட்டால் அப்படியே நடந்து சென்று சுவாமியை எளிதாக குடியரசுத் தலைவரால் தரிசனம் செய்ய முடியும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications