எலி மாதிரி அங்குமிங்கும் அலைகிறது பாஜக.. பிரியங்கா கடும் தாக்கு
ரேபரேலி: பதவியைப் பிடிப்பதற்காக, எலி போல கிடைக்கும் இடத்திலெல்லாம் நுழைந்து அலைந்து திரிகிறது பாஜக என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.
சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலியில் பிரியங்கா காந்தி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் பாஜகவை கடுமையாக சாடினார்.
பிரியங்காவின் பேச்சிலிருந்து...

அப்படியே எலி மாதிரி
பயந்து நடுங்கிப் போய்க் கிடக்கிறது பாஜக. பதவி கிடைக்காமல் போய் விடுமோ என்று அஞ்சுகிறது. இதனால் எலி போல, கிடைக்கும் இடத்தில் எல்லாம் புகுந்து அலைந்து திரிகிறது.

பொய் மூட்டைகள்
பாஜகவில் தலைவர்கள் பேசுவது எல்லாமே பொய்கள்தான். இதை இவர்கள் தொடர்ந்து பேசத்தான் செய்வார்கள்.

என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கட்டும்
அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். நமக்குக் கவலை இல்லை.அவர்கள் சொல்வதில் புதிதாக எதுவும் இல்லை.

யாரைப் பற்றியும் எனக்குப் பயம் இல்லை
எனக்கு யாரைப் பற்றியும் பயம் இல்லை. அவர்கள் மேற்கொள்வது அவமானகரமான அரசியல். அழிவு அரசியல், எதிர்மறை அரசியல்.

ஆனால் பொறுமை மீறினால்
ஆனால் நான் தொடர்ந்து அமைதியாக இருக்க மாட்டேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அவர்களை விட அதிகமாகவே நான் பதிலளிப்பேன் என்றார் பிரியங்கா காந்தி.












Click it and Unblock the Notifications