உத்தரபிரதேசம் சம்பல் மசூதி ஆய்வுக்கு எதிர்ப்பு! வன்முறையால் நீடிக்கும் பதற்றம்! இணைய சேவை துண்டிப்பு
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் சம்பல் ஷாஜி ஜமா மசூதியை நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. மசூதி ஆய்வுக்கு எதிராக போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வன்முறை வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறையால் அங்கு பதற்றமான சூழல் நீடிக்கிறது. இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜாமா என்கிற மசூதி உள்ளது. 1529 ஆம் ஆண்டு முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மசூதி பாரம்பரிய இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டதாக சம்பல் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது.

அதன்படி இரு தரப்பினர் முன்னிலையில் நீதிமன்ற ஆணையர் கடந்த 5-ந் தேதி மசூதியில் ஆய்வு நடத்தினார். நீதிமன்ற ஆணையர் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்வார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இரண்டாவது முறையாக நீதிமன்ற ஆணையர் ஆய்வுக்கு சென்ற போது, அங்கு வன்முறை ஏற்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியாகினர்.
சுமார் 30 போலீசார் காயம் அடைந்தனர். வன்முறையாளர்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. இந்த சம்பவத்தால் உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இணையசேவை முடக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநபர்கள் அந்த பகுதிக்கு வர தடை விதிக்கபட்டுள்ளது. செங்கல், சோடா பாட்டில், வெடிக்க கூடிய பொருட்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications