பாலியல் பலாத்கார வழக்கில் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 வருடம் கடுங்காவல் சிறை:நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை அளித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி: 'தேரா சச்சா சவுதா' என்ற ஆன்மிக அமைப்பு தலைவரான குர்மீத் ராம் ரஹிம் சிங், இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 15 வருடகால வழக்கில் குற்றவாளி என, சிபிஐ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இதையடுத்து, வன்முறையில் இறங்கினர் ராம் ரஹிம் ஆதரவாளர்கள். இதனிடையே குற்றவாளிக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை, நீதிமன்றம் இன்று அறிவித்தது.

நீதிபதி முன்னிலையில் சிபிஐ மற்றும் ராம் ரஹிம் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடியபிறகு அவர்கள் வாதத்தை கருத்தில் கொண்டு நீதிபதி ராம் ரஹீம் மீதான தண்டனையை அறிவிப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, வன்முறையில் இறங்கினர் ராம் ரஹிம் ஆதரவாளர்கள். இதனிடையே குற்றவாளிக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை, நீதிமன்றம் இன்று அறிவித்தது. நீதிபதி முன்னியில் சிபிஐ மற்றும் ராம் ரஹிம் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடியபிறகு அவர்கள் வாதத்தை கருத்தில் கொண்டு நீதிபதி ராம் ரஹிம் மீதான தண்டனையை அறிவிப்பதாக கூறப்பட்டிருந்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காக சிபிஐ நீதிமன்ற நீதிபதியான ஜக்திப் சிங், பஞ்ச்குலா கோர்ட்டில் வாதத்தை நடத்தாமல், ராம் ரஹிம் அடைக்கப்பட்டுள்ள ரோத்தகி மாவட்ட சிறையிலுள்ள நூலகத்தை தற்காலிக நீதிமன்றமாக மாற்ற உத்தரவிட்டார்.
சாலை மார்க்கமாக வருவது நீதிபதிக்கு பாதுகாப்பு இல்லை என கருதியதால் ஹெலிகாப்டர் மூலம் சிறை வளாகத்திற்கு நீதிபதியும் அவரின் உதவியாளர்களும் வந்தனர். இதையடுத்து இரு தரப்பு வழக்கறிஞர்களையும் தலா 10 நிமிடங்களுக்குள் வாதிடுமாறு நீதிபதி கேட்டுக்கொண்டார்.
முதலில் வாதத்தை தொடங்கிய சிபிஐ தரப்பு, ராம் ரஹீமுக்கு அதிகபட்ச தண்டனையான ஆயுள் தண்டனை வழங்க கேட்டுக்கொண்டது.
அதேநேரம், ராம் ரஹிம் தரப்பு வழக்கறிஞர் கார்க் நர்வானா, தனது கட்சிக்காரர் வயது முதிர்வை கருத்தில் கொண்டு சிறை தண்டனையை குறைக்க வேண்டும் என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ராம் ரஹீமுக்கு 20வருட கால கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இரண்டு வழக்குகளில் தலா பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க நான்கு மாநிலங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் 3 வழக்கு பிரிவுகளுக்காக தலா ரூ.50,000, ரூ.10,000, ரூ.5000 அபராதம் விதித்தார் நீதிபதி. மேலும், மற்ற கைதிகளை போலவே சாதாரணமாக இவரை நடத்த வேண்டும், சிறப்பு சலுகைகள் வழங்க கூடாது என கண்டிப்புடன் கூறினார் நீதிபதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications