உலக புகழ் பெற்ற பூரி ஜெகன்நாதர் ஆலய தேரோட்டம்.. வடம் பிடித்து இழுக்கும் 1500 பேருக்கு கொரோனா டெஸ்ட்
புவனேஸ்வர்: கொரோனா பரவலால், ஒடிசாவின், பூரி நகரின் புகழ்பெற்ற ஜெகன்நாதர் ரதயாத்திரை நிறுத்தப்பட வேண்டாம் என்றாலும், பக்தர்களை பங்கேற்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியது.
பூரி தேரோட்டம் ஜூன் 23ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் தொடங்க உள்ளது. ஜெகன்நாதர் ரத யாத்திரையின் போது ரதங்களை இழுக்க உள்ள அனைவருக்கும் கட்டாய கோவிட் -19 பரிசோதனை செய்து நெகட்டிவ் என ரிசல்ட் வந்திருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஒடிசா அரசு, திங்கள்கிழமை, பூரியில் ஒரு பெரும் கொரோனா வைரஸ் சோதனைகளை மேற்கொண்டது.

புகழ் பெற்ற பூரி ரத யாத்திரையில் மொத்தம் மூன்று ரதங்கள் உள்ளன. பகவான் ஜெகன்நாதரின் நந்திகோஷ், பாலபத்ராவின் தலத்வாஜா மற்றும் தேவி சுபத்ராவின் தர்பதலன் ஆகியவை இந்த ரதங்களாகும்.
ஒரு தேரை இழுக்க ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை, எனவே, மூன்று ரதங்களை இழுக்க மொத்தம் 1500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பரிசோதனை நடைபெற்றது.
இதற்கிடையில், ஒடிசா அரசுங்கம் பூரிக்கான அனைத்து நுழைவு வாயில்களையும் சீல் வைத்துள்ளது. ரத யாத்திரை ஏற்பாடு நோக்கத்திற்காக தவிர வேறு எந்த வாகனமும் பூரி நகரத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், இதுபற்றி கூறுகையில், கொரோனா பரவலுக்கு மத்தியில், பூரியில் ஜெகன்நாதரின் ரத யாத்திரையை நடத்துவது பெரிய சவால் என்றும், பல நூற்றாண்டுகள் பழமையான மரபுகளுக்கும், பொது சுகாதாரத்திற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த உதவ வேண்டும் என்றும் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
Recommended Video
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications