மாபெரும் மோசடி நடந்துள்ளது.. ஏன் அமைதி காக்கிறார் மோடி.. ராகுல் காந்தி ஆவேசம்
Recommended Video

டெல்லி: ரபேல் விமான விவகாரத்தில் மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது. இந்த புகாரை உண்மை என்று தெளிவுபடுத்தியுள்ளார் பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலண்டே. ஏன் இன்னும் பிரதமர் மோடி மெளனமாக இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது ஹோலண்டேவின் பேட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். பிரதமர் மோடியை கடுமையாக அவர் தாக்கிப் பேசினார். பிரதமரை திருடன் என்றும் மீண்டும் அவர் அழுத்தம் திருத்தமாக கூறினார்.
ராகுல் பேட்டியிலிருந்து:

ஹோலண்டே கூறியுள்ள தகவல் மிகப் பெரியது. நமது பிரதமரை பொய்யர் என்று கூறியுள்ளார் ஹோலண்டே, திருடன் என்று கூறியுள்ளார். பிரதமர் இதற்கு பதில் அளிக்க வேண்டும். நாட்டுக்கு அவர் பெரும் துரோகம் இழைத்து விட்டார். படை வீரர்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்.
ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பு ஹோலண்டேவும், மோடியும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போதுதான் அனில் அம்பானியைப் பரிந்துரைத்துள்ளார் பிரதமர் மோடி. அதன் பிறகுதான் ஒப்பந்தம் ரிலையன்ஸுக்குப் போயுள்ளது.
ரூ. 30,000 கோடி கிப்ட் மோடி, அனில் அம்பானி இடையே பரிமாறப்பட்டுள்ளது. ஹோலண்டே பொய் சொல்கிறாரா அல்லது அவர் சொல்வது உண்மையா என்பதை பிரதமர்தான் விளக்க வேண்டும். ஆனால் அவர் ஏன் அமைதியாக இருக்கிறார். நாட்டின் காவலனே திருடன் என்ற எண்ணம்தான் தற்போது மக்களிடையே நிலவுகிறது.
நடந்துள்ள மோசடி கிட்டத்தட்ட நிரூபணமாகி விட்டது. இனியம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. பிரதமர்தான் விளக்கம் தர வேண்டும் என்று கூறினார் ராகுல் காந்தி.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications