தலித்களிடையே அரசியல் தலைவர்கள் உருவாவதை தடுக்கும் மாயாவதி: ராகுல் தாக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேசத்தின் தலித் மக்களிடையே அரசியல் தலைவர்கள் உருவாவதை பகுஜன் சமாஜ்கட்சித் தலைவர் மாயாவதி தடுத்து வருகிறார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் தலித் மேம்பாடு தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, தலித் மக்கள் அம்பேத்கரை தலைவராக கொண்டுள்ளனர். அதன் பின்னர் கன்சிராமை தலைவராக ஏற்றனர்.

தற்போது மாயாவதி தலைவராக இருக்கிறார். ஆனால் தலித் மக்களிடத்தில் புதிய அரசியல் தலைவர்கள் உருவாகக் கூடாது என்பதில் அவர் தன் முனைப்புடன் செயல்படுகிறார் என்றார்.

ஊழலுக்கு எதிரான ஆயுதம் ஆர்டிஐ

ஊழலுக்கு எதிரான ஆயுதம் ஆர்டிஐ

இதைத் தொடர்ந்து வால்மீகி சமாஜ் மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, ஊழல்தான் மிகப் பெரிய பிரச்சனை என்று மக்கள் கூறுகின்றனர். இந்த ஊழலுக்கு எதிரான ஆயுதமாக திகழ்கிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

அரசை கேள்வி கேளுங்கள்.

அரசை கேள்வி கேளுங்கள்.

அப்படிப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான். இந்த சட்டம் மூலம் ஒவ்வொரு குடிமகனும் அரசை கேள்வி கேட்க முடியும்.

உண்மையை பேசினேன்..

உண்மையை பேசினேன்..

தண்டனை பெற்ற எம்.பி.க்களைப் பாதுகாக்கும் அவசர சட்டம் தொடர்பாக ஒரு பத்திரிகையாளர் என்னிடம் நீங்கள் தவறாகப் பேசிவிட்டீர்கள் என்றார். ஆனால் நானோ, உண்மையைப் பேச வேண்டிய தருணம் அது என்று பதிலளித்தேன்.

பாஜக தோற்கும்

பாஜக தோற்கும்

2004,2009 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியைத் தழுவியது. 2014ஆம் ஆண்டும் அப்படித்தான் நடக்கப் போகிறது.

நாங்க இந்தியாவோட குரல்

நாங்க இந்தியாவோட குரல்

இந்தியாவின் குரலாக இருப்பது காங்கிரஸ் மட்டுமே. காங்கிரஸ் கட்சி மட்டுமே ஏழை எளியமக்களுக்கான கட்சி என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+