For Daily Alerts
Just In
தேர்தல் ஆணையத்துக்கு பதிலளித்தார் ராகுல்காந்தி
டெல்லி: கடந்த 1ம்தேதி ஹிமாச்சல பிரதேச மாநிலம் சோலனில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பாஜக ஆட்சிக்கு வந்தால் கலவரத்தில் 22ஆயிரம் பேர் கொல்லப்படுவார்கள் என்று கூறியிருந்தார். இந்த பேச்சு தேர்தல் நடத்தை விதிமீறல்களுக்கு எதிரானது என்று கூறி பாஜக சார்பில் தேரத்ல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.
மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. கடந்த 12ம்தேதிக்குள் பதிலளிக்க காலக்கெடு அளித்த போதிலும் அதற்குள் ராகுல் பதிலளிக்கவில்லை. எனவே மேலும் மூன்று நாட்கள் காலநீட்டிப்பு அளிக்கப்பட்டது.
அதையேற்று ராகுல்காந்தி தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், மக்களின் உணர்வையே நான் வெளிப்படுத்தினேன். நடத்தை விதிமுறைகள் எதையும் மீறவில்லை என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Comments
English summary
Rahul Gandhi has replied to the election commission, to its show cause.
Story first published: Friday, May 16, 2014, 8:20 [IST]