தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்; பயணிக்காவிட்டால் பாதி பணம் வாபஸ்
டெல்லி: அடிக்கடி ரயிலில் திடீர் பயணம் செய்பவரா? தட்கல் டிக்கெட் எடுத்துவிட்டு பயணிக்க முடியாமல் போய் பணத்தை இழந்தவரா? இனி கவலை வேண்டாம். தட்கல் டிக்கெட் எடுத்தும் பயணிக்க முடியாமல் போனால் இனி பாதி பணம் திரும்ப கிடைக்கும். இந்த மகிழ்ச்சியான செய்தியை விரைவில் அறிவிக்க உள்ளது இந்திய ரயில்வே நிர்வாகம்.
ரயிலில் பயணிக்க தட்கல் முறையில் முன்பதிவு செய்த பயணிகள் திடீரென பயணம் செய்ய முடியாமல் போகும் போது, டிக்கெட்டை ரத்து செய்யவோ கட்டணத்தை திரும்பபெறவோ முடியாத நிலையே உள்ளது. இனி அவ்வாறு ரத்து செய்ய நேரிட்டால் கட்டணத்தில் பாதியை திரும்பபெறும் விதமாக தட்கல் முன்பதிவு முறையை மாற்றியமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

முன்பதிவில் மாற்றம்
தவிர தட்கல் டிக்கெட்டுக்கான முன்பதிவு நேரம் இரு பிரிவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏ.சி. வகுப்பில் பயணிப்போர் காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும், மற்ற வகுப்பு பயணிகள் 11 மணியிலிருந்து 12 மணிவரையிலும் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தட்கல் ஸ்பெஷல் ரயில்
அத்துடன் கோடைக்கால சிறப்பு ரயில் போன்று கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு முக்கிய வழிதடங்களில் தட்கல் ஸ்பெஷல் என புதிய சேவையை அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
டிக்கெட் புக்கிங்
ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் பிரிமீயம் ரயிலுக்கான டிக்கெட் போன்று அல்லாமல், கவுண்டர்களிலும் இந்த தட்கல் சிறப்பு ரயில்வே டிக்கெட்டை பெறமுடியும். 10 நாட்களுக்கு முன்னதாக இந்த ரயில்களுக்கு பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தட்கல் டிக்கெட்டுகள் தற்போது பயணம் செய்வதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னதாக வழங்கப்படுகிறது.
முன்பதிவு எப்படி?
தக்கல் சிறப்பு ரயிலுக்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்பாகவும் அதிகபட்சம் 60 நாட்களுக்கு முன்பாகவும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கட்டணம் எவ்வளவு
மேலும் தக்கல் சிறப்பு ரயில் சேவைக்கு பயணக்கட்டணம் 2ம் வகுப்பில் பயணம் செய்ய சாதாரண கட்டத்தில் இருந்து 10 சதவீதம் அதிகமாகவும், பிறவகுப்புகளுக்கு அடைப்படை கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அதிகமாக வசூலிக்கப்படும்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications