பட்ஜெட் 2018: டிஜிட்டல் மயமாகும் ரயில் நிலையங்கள் - வை-பை, சிசிடிவி காமிரா வசதியுடன்!
நாட்டில் உள்ள ரயில்நிலையங்களில் படிப்படியாக வை-பை மற்றும் சிசிடிவி காமிரா வசதி அமைக்கப்படும் என நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: நாட்டின் அனைத்து ரயில்நிலையங்களிலும் படிப்படியாக வை-பை மற்றும் சிசிடிவி காமிரா வசதி அமைக்கப்படும் என நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றதில் பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் ஜேட்லி, ஸ்மார்ட், அம்ருத் திட்டங்களுக்கு ரூ2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். நாடு முழுவதும் 100 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைத் தொடர்ந்து அம்ருத் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய அளவில் 500 நகரங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் கோடியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அம்ருத் திட்டம் அமலாக்கப்பட்டால், நகர்ப்புறங்களில் மின் ஆளுமைக்கு அடிப்படையாக அமைந்த கணினிமயமாக்கல் போன்ற சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். குடிநீர் வசதி, மின்சார வசதி போன்றவை முறையாகக் கண்காணிக்கப்படும். குடிமக்களுக்குப் பயன்படும் வகையில் நகரத்தின் உள்கட்டமைப்பு மேம்படும் வகையிலான திட்டமிடல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நாட்டில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களும் டிஜிட்டலாக மாற்றப்படும் என்றும் ஜேட்லி தெரிவித்தார். தற்போது முக்கிய ரயில்நிலையங்களில் மட்டும் உள்ள வை-பை, சிசிடிவி காமிரா வசதி அனைத்து ரயில்நிலையங்களிலும் நிறுவப்படும் என்றும் இதற்காக ஒரு லட்சத்து 48ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர் நாடு முழுவதும் கிராமப்புற பகுதிகளில் சுமார் 5 லட்சம் வை-பை ஸ்பாட்டுகள் ஏற்படுத்தப்படும் என்றும் ஜேட்லி கூறினார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications