கேரளாவில் தொடரும் கனமழை... மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் பட்டுள்ளனர்.
கடந்த 7ம் தேதி கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இதுவரை கேரளாவில் குறைந்த அளவே மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று கேரளாவின் பல இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. குறிப்பாக கேரளாவின் வட மாவட்டங்களான பாலக்காடு, காசர்கோடு, கண்ணூர் போன்ற மாவட்டங்களில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. தலைநகரான திருவனந்தபுரத்திலும் பலத்த மழை பெய்தது.

போக்குவரத்து பாதிப்பு...
கனமழை காரணமாக தம்பானூர், கரமனை, நெடுமங்காடு போன்ற பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. சில இடங்களில் மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்தது.

மின் இணைப்பு துண்டிப்பு...
இதனால் திருவனந்தபுரத்தில் நேற்றிரவு மின்தடை ஏற்பட்டது. பல மணி நேரம் இருளில் சிக்கித் தவித்தனர் திருவனந்தபுரம் மக்கள்.

உயிர்சேதம் தவிர்ப்பு...
அதேபோல், கிளிமானூர் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் ஒரு வீடு மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டின் ஓடுகள் நொறுங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

எச்சரிக்கை...
இதற்கிடையே, கேரளாவில் இன்று முதல் 3 நாட்களுக்கு பலத்த சூறாவளி காற்றுடன் இடைவிடாது மழை பெய்யும் என வானிலை இலாகா அறிவித்துள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் பட்டுள்ளனர்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications