கேரளாவில் தொடரும் கனமழை... மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் பட்டுள்ளனர்.
கடந்த 7ம் தேதி கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இதுவரை கேரளாவில் குறைந்த அளவே மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று கேரளாவின் பல இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. குறிப்பாக கேரளாவின் வட மாவட்டங்களான பாலக்காடு, காசர்கோடு, கண்ணூர் போன்ற மாவட்டங்களில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. தலைநகரான திருவனந்தபுரத்திலும் பலத்த மழை பெய்தது.

போக்குவரத்து பாதிப்பு...
கனமழை காரணமாக தம்பானூர், கரமனை, நெடுமங்காடு போன்ற பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. சில இடங்களில் மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்தது.

மின் இணைப்பு துண்டிப்பு...
இதனால் திருவனந்தபுரத்தில் நேற்றிரவு மின்தடை ஏற்பட்டது. பல மணி நேரம் இருளில் சிக்கித் தவித்தனர் திருவனந்தபுரம் மக்கள்.

உயிர்சேதம் தவிர்ப்பு...
அதேபோல், கிளிமானூர் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் ஒரு வீடு மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டின் ஓடுகள் நொறுங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

எச்சரிக்கை...
இதற்கிடையே, கேரளாவில் இன்று முதல் 3 நாட்களுக்கு பலத்த சூறாவளி காற்றுடன் இடைவிடாது மழை பெய்யும் என வானிலை இலாகா அறிவித்துள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் பட்டுள்ளனர்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications