சண்முகநாதனின் பாலியல் தொல்லை.. தலைதெறிக்க தப்பி ஓடிய 'நைட்டூட்டி' நர்ஸ்..
மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதனின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் நைட் டூட்டி நர்ஸ் ஒருவர் வேலையே வேண்டாம் என அண்மையில் ஓடிவிட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஷில்லாங்: மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதனின் பாலியல் தொல்லை தாங்காமல் 10 நாட்களிலேயே வேலையே வேண்டாம் என தூக்கி எறிந்துவிட்டு இரவு பணி நர்ஸ் தப்பி ஓடியதாக ராஜ்பவன் ஊழியர்கள் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
சண்முகநாதனின் லீலைகள் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்களுக்கு 100-க்கும் மேற்பட்ட ராஜ்பவன் ஊழியர்கள் அனுப்பிய புகார் கடிதத்தில் இரவு பணி நர்ஸ் குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

ராஜ்பவனில் ஒரு மருத்துவர், 2 உதவியாளர்களைக் கொண்ட நிரந்தரமான மருத்துவ குழு இருக்கிறது. ஆனால் சண்முகநாதன் கூடுதலாக பகல் நேர பணியில் நர்ஸ் ஒருவரை நியமித்தார்.
அதன்பின்னர் அண்மையில் இரவுநேர பணிக்கு என ஒரு நர்ஸையும் நியமித்துக் கொண்டார் சண்முகநாதன். அந்த நர்ஸ், கடந்த ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ராஜ்பவனில் சகல வசதிகளுடன் தங்கி இருந்தார்.

ஆனால் அக்டோபர் 26-ந் தேதியன்று சண்முகநாதன் தம்மிடம் தவறாக நடக்கிறார் என கூறி வேலையை தூக்கி எறிந்துவிட்டு சென்றுவிட்டார்.
இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications