கொல்லப்படுவதற்கு முன் என்னிடம் போன் செய்து பேசினார்.. ராஜஸ்தானில் இறந்தவரின் மனைவி உருக்கம்

ராஜஸ்தானில் 'லவ் ஜிஹாத்' என்று கூறி கொலை செய்யப்பட்டவரின் மனைவி உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 'லவ் ஜிஹாத்' என்று கூறி முகமது அப்ரசுல் என்ற நபர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியது.

இதனால் இந்த சம்பவம் பெரிய பிரச்சனை ஆனது. அவர் கொடூரமாக கொலை செய்யப்படுவது அப்படியே அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் தற்போது கொல்லப்பட்டவரின் மனைவி இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். தன் மொத்த குடும்பமே அவரை நம்பித்தான் இருந்தது என்று அந்த பெண் மிகவும் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.

கொடூரமான கொலை

கொடூரமான கொலை

மேற்கு வங்கத்தை சேர்ந்த முகமது அப்ரசுல் ராஜஸ்தானில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்தார். அதே ஊரை சேர்ந்த சம்புலால் ரேகர் என்பவர் இவரை காட்டுப் பகுதி ஒன்றிற்கு வேலை விஷயமாக கூட்டி சென்றுள்ளார். அங்கு முகமது அப்ரசுலை மிகவும் கொடூரமாக கோடாளியால் தாக்கி, உயிரோடு எரித்து கொலை செய்துள்ளார். மேலும் சம்புலால் நண்பர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

காரணம் என்ன

காரணம் என்ன

இந்த கொலைக்கு 'லவ் ஜிஹாத்' தான் காரணம் என கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் சம்புலால் ரேகர் தங்கைக்கும் கள்ள தொடர்பு இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் காரணமாகவே ஆத்திரம் தாங்காமல் முகமது அப்ரசுல் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மனைவி பேட்டி

மனைவி பேட்டி

தற்போது இந்த சம்பவம் குறித்து முகமது அப்ரசுல் மனைவி பேட்டி அளித்துள்ளார். அதில் ''என்னுடைய கணவர் அப்போதுதான் எனக்கு போன் செய்து இருந்தார். சேமித்த 50,000 ரூபாய் பணத்தை உனக்கு அனுப்புகிறேன். அதை வைத்து கடனை அடை. இப்போது வங்கிக்கு சென்று பணம் வருகிறதா என்று சரிபார்'' என்று கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் வங்கிக்கு சென்று 2 மணி நேரம் ஆகியும் பணம் வரவில்லை. போனும் அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது. பின்புதான் அவர் கொல்லப்பட்ட சம்பவம் அவருக்கு தெரிந்துள்ளது.

வழியே இல்லை

வழியே இல்லை

அதேபோல் அவர் லவ் ஜிஹாத் குறித்தும் பேசியுள்ளார். அதில் ''எங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறர்ர்கள். வறுமையினால் ஒரு பெண் வேலைக்கு செல்கிறாள். அவருக்கு எல்லாம் குடும்ப வறுமையில் அப்படி ஒரு எண்ணமே வராது. சிறுக சிறுக பணம் சேர்த்து இப்போதுதான் அதை அனுப்ப நினைத்தார்.அவரை கொன்றவனுக்கு அரசு தூக்கு தண்டனை வாங்கி தரவேண்டும்'' என்று கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+